- அ.சீ.லாவண்யா
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமல்லாமல், தேயிலை அருந்தும் கோடிக்கணக்கான மக்களும் இந்த நாளை நினைவுகூர்கிறார்கள். ஒரு சிறிய தேயிலையின் பின்னால் இருக்கும் பெரும் உலகத்தை உணரச் செய்வதே இந்த நாளின் நோக்கம்.
தேயிலை என்பது வெறும் பானம் மட்டுமல்ல; அது பல நாடுகளின் பண்பாடு, பாரம்பரியம், மற்றும் வாழ்க்கை முறையோடு இணைந்த ஒன்று. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தேயிலை முக்கியமான வேளாண் உற்பத்தியாக உள்ளது
தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பு மிக முக்கியமானது. அவர்கள் காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து இலைகளைப் பறிக்கிறார்கள். இப்போது இருக்கும் உணவு பிரியர்களில் பெரும்பாலானார் தேநீர் பிரியர்களே.
சிங்கிள் டீ போதும்!

நமக்கு சோர்வாக இருக்கிறதா ஒரு டீ போதும். நமக்கு ஒரு தலை வலியா இருந்தாலும் ஒரு டீ போதும். நம் இல்ல விழாகளில் முக்கிய இடம் கொடுப்பது ஒரு டீ போதும் வீடே ஆனந்தமாக மாறும். நமக்கு ஆயிரம் மனக்கவலையா டீ கடையில் ஒரு டீ குடித்தால் நிம்மதி அது தான் டீ ஓட மகிமை. உலகத்தின் பல இடங்களிக் எளிதில் கிடைப்பது டீ.
மாலை வேலையில் இருந்து மன சந்தோசத்துடன் வீடு திரும்ப வேலை இடங்களில் கொடுப்பதுன் டீ. போரடிக்குதா.. கிளம்பி ஒரு டீயை சாப்பிட்டா சோர்வு ஓடிப் போயிரும்.. 1000 கொடுத்து வாங்கி சாப்பிடும் உணவுக்கு மத்தியில் ஒரு 10 ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் ஆனந்தம் இருக்கிறதே சொல்ல மொழிகள் இல்லை.
மழைக்காலங்களின் நண்பன் டீ.. மழைபெய்யும்போது சூடான சாய் போதும்.. என்ஜாய் பண்ணி மழையை ரசிப்பதற்கு.. போனஸாக கடகடவென்று கவிதைகளும் கூட மழையாக கொட்டும் பலருக்கும்.
இல்லதரசிகளுக்கு எனக்கா tiredah never என்ற வார்த்தைக்கு பதில் தரும் ஒரு energy தருவது ஒரு டீ தான். டீ பிரியர்களிடம் கேட்டால் அவர்கள் Tea is secrete of my energy என்று சொல்வார்கள்.
விவசாயியின் நண்பன்
மேலும் தேயிலை விவசாயிகள் இயற்கையை நம்பி வாழ்பவர்கள். மழை, காலநிலை மாற்றம், சந்தை விலை மாற்றம் போன்றவை அவர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கின்றன. சர்வதேச தேயிலை தினம், இவர்களின் பிரச்சினைகள் உலக கவனத்திற்கு வர வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது.
காலை விழிக்கும் கண்களுக்கு முதளில் தெரிவது tea tea, சோர்வை உருக்கி சிந்தைக்கு சுறுசுறுப்பு தரும். Tea, நண்பர்களை இணைக்கும் இனிய உரையாடல் தேயிலை, ஒரு tea cup -ல் அடங்கிய சிறு ஆனந்தம் out of world என்றே சொல்லலாம்.
டீ சாப்பிட்டுப் பாருங்க மக்களே.. வாழ்க்கை அழகாக இருக்கும்!
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
நிறை குடம்
{{comments.comment}}