சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!

Dec 15, 2025,04:23 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை:  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமல்லாமல், தேயிலை அருந்தும் கோடிக்கணக்கான மக்களும் இந்த நாளை நினைவுகூர்கிறார்கள். ஒரு சிறிய  தேயிலையின்  பின்னால் இருக்கும் பெரும் உலகத்தை உணரச் செய்வதே இந்த நாளின் நோக்கம்.


தேயிலை என்பது வெறும் பானம் மட்டுமல்ல; அது பல நாடுகளின் பண்பாடு, பாரம்பரியம், மற்றும் வாழ்க்கை முறையோடு இணைந்த ஒன்று. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தேயிலை முக்கியமான வேளாண் உற்பத்தியாக உள்ளது


தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பு மிக முக்கியமானது. அவர்கள் காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து இலைகளைப் பறிக்கிறார்கள். இப்போது இருக்கும் உணவு பிரியர்களில் பெரும்பாலானார் தேநீர் பிரியர்களே. 


சிங்கிள் டீ போதும்!




நமக்கு சோர்வாக இருக்கிறதா ஒரு டீ போதும். நமக்கு ஒரு தலை வலியா இருந்தாலும் ஒரு டீ போதும். நம் இல்ல விழாகளில் முக்கிய இடம் கொடுப்பது ஒரு டீ போதும் வீடே ஆனந்தமாக மாறும். நமக்கு ஆயிரம் மனக்கவலையா டீ கடையில் ஒரு டீ குடித்தால் நிம்மதி அது தான் டீ ஓட மகிமை. உலகத்தின் பல இடங்களிக் எளிதில் கிடைப்பது டீ. 


மாலை வேலையில் இருந்து மன சந்தோசத்துடன் வீடு திரும்ப வேலை இடங்களில் கொடுப்பதுன் டீ. போரடிக்குதா.. கிளம்பி ஒரு டீயை சாப்பிட்டா சோர்வு ஓடிப் போயிரும்.. 1000 கொடுத்து வாங்கி சாப்பிடும் உணவுக்கு மத்தியில் ஒரு 10 ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் ஆனந்தம் இருக்கிறதே சொல்ல மொழிகள் இல்லை.


மழைக்காலங்களின் நண்பன்  டீ.. மழைபெய்யும்போது சூடான சாய் போதும்.. என்ஜாய் பண்ணி மழையை ரசிப்பதற்கு.. போனஸாக கடகடவென்று கவிதைகளும் கூட மழையாக கொட்டும் பலருக்கும்.


இல்லதரசிகளுக்கு எனக்கா tiredah never என்ற வார்த்தைக்கு பதில் தரும் ஒரு energy தருவது ஒரு டீ தான். டீ பிரியர்களிடம் கேட்டால் அவர்கள் Tea is secrete of my energy என்று சொல்வார்கள்.


விவசாயியின் நண்பன்


மேலும் தேயிலை விவசாயிகள் இயற்கையை நம்பி வாழ்பவர்கள். மழை, காலநிலை மாற்றம், சந்தை விலை மாற்றம் போன்றவை அவர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கின்றன. சர்வதேச தேயிலை தினம், இவர்களின் பிரச்சினைகள் உலக கவனத்திற்கு வர வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது.


காலை விழிக்கும் கண்களுக்கு முதளில் தெரிவது tea tea, சோர்வை உருக்கி சிந்தைக்கு சுறுசுறுப்பு தரும். Tea, நண்பர்களை இணைக்கும் இனிய உரையாடல் தேயிலை, ஒரு tea cup -ல் அடங்கிய சிறு ஆனந்தம் out of world என்றே சொல்லலாம்.


டீ சாப்பிட்டுப் பாருங்க மக்களே.. வாழ்க்கை அழகாக இருக்கும்!


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து 

நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்