வடக்கில் வெயில் குறையும்.. மழை வந்து ஆறுதல் தரும்.. தெற்கு தொடர்ந்து சுடும்.. வெதர்மேன் தகவல்!

Sep 21, 2024,06:10 PM IST

சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


வெயிலின் தலைநகரமான மதுரை




குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்று அதிகளவு வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் . சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து அதீத வெயில் அளவு மதுரையில் பதிவாகி வருவதால் மதுரை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


முன்னதாக சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தவெளி, மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் திடீரென சென்னையில் நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்தது. சென்னை சோழிங்க நல்லூரில் அதிகபட்சமாக 8.1 சென்டிமீட்டர் மழையும், தாம்பரத்தில் 5.3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.


வடக்கில் மழை தொடரும்


இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் வெப்பம் குறைய கூடும். வட தமிழகத்தை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடரும்.அப்போது  இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் சார் தெரிவித்துள்ளார்.


அடுத்த 3 மணி நேரத்தில்


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரம் 23ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்