கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்தனர். நேதாஜி நகரில் ஒருவர் உயிரிழந்தார். மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

தெற்கு வங்காள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன. கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கொல்கத்தாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. பூர்பா மெதின்பூர், பாஸ்சிம் மெதின்பூர், தெற்கு 24 பர்காணா, ஜார்கிரம், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மேலும் மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே கொல்கத்தா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஷாஹித் குதிராம், மெய்தான் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். விரைவில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என்றார்.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}