கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்தனர். நேதாஜி நகரில் ஒருவர் உயிரிழந்தார். மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

தெற்கு வங்காள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன. கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கொல்கத்தாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. பூர்பா மெதின்பூர், பாஸ்சிம் மெதின்பூர், தெற்கு 24 பர்காணா, ஜார்கிரம், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மேலும் மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே கொல்கத்தா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஷாஹித் குதிராம், மெய்தான் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். விரைவில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என்றார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}