கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு

Sep 23, 2025,11:02 AM IST

கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. 


விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.


கொல்கத்தாவில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்தனர். நேதாஜி நகரில் ஒருவர் உயிரிழந்தார். மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.




தெற்கு வங்காள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன. கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று நள்ளிரவு முதல் கொல்கத்தாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது. 


வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. பூர்பா மெதின்பூர், பாஸ்சிம் மெதின்பூர், தெற்கு 24 பர்காணா, ஜார்கிரம், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மேலும் மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.


கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே கொல்கத்தா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஷாஹித் குதிராம், மெய்தான் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். விரைவில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்