கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று பெய்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த மழை காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்தனர். நேதாஜி நகரில் ஒருவர் உயிரிழந்தார். மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

தெற்கு வங்காள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன. கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கொல்கத்தாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. பூர்பா மெதின்பூர், பாஸ்சிம் மெதின்பூர், தெற்கு 24 பர்காணா, ஜார்கிரம், பங்குரா ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மேலும் மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே கொல்கத்தா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஷாஹித் குதிராம், மெய்தான் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே எங்களின் முதல் குறிக்கோள். விரைவில் முழுமையான ரயில் சேவை தொடங்கப்படும் என்றார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}