வருது.. மழை.. கன மழை.. இன்று முதல் 4 நாட்கள் வரை!

Sep 06, 2023,03:35 PM IST
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப்டம்பர்6 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒட்டிய பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி உள்ள நீலகிரி, தேனி ,திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்டம்பர்7) தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் . திருநல்வேலி ,நீலகிரி, தேனி ,திண்டுக்கல் மற்றும் தென்காசி போன்ற ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

(08.09.2023) முதல் (10.09.2023) வரை தமிழ்நாடு ,காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில  பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்