சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை மறு நாள் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று 17 மாவட்டங்களில் கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
16ம் தேதி நிலவரம்

ஆகஸ்ட் 16ம் தேதியான நாளை நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17ம் தேதி நிலவரம்

நீலகிரி, திருப்பூர், கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
18ம் தேதி நிலவரம்

ஆகஸ்ட் 18ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
19ம் தேதி நிலவரம்

ஆகஸ்ட் 19ம் தேதி கன மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}