சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை மறு நாள் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று 17 மாவட்டங்களில் கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
16ம் தேதி நிலவரம்
ஆகஸ்ட் 16ம் தேதியான நாளை நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17ம் தேதி நிலவரம்
நீலகிரி, திருப்பூர், கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
18ம் தேதி நிலவரம்
ஆகஸ்ட் 18ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
19ம் தேதி நிலவரம்
ஆகஸ்ட் 19ம் தேதி கன மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}