கொட்டும் மழை.. நனைந்தபடி பள்ளி வந்த பிள்ளைகள்.. பாவப்பட்ட செங்கல்பட்டு மாணவர்கள்!

Nov 30, 2023,08:39 AM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. ஆனால் தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தவிர மற்ற நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை காலையிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிப் பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படாத காரணத்தால் காலையிலிருந்து கொட்டும் கன மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல செங்கல்பட்டிலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கும் சேர்த்தே விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர். நேற்று இரவு,  முதலில் விடுமுறை விடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் சில நிமிடங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியானது. தற்போது  மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால் பார்ப்போர் பரிதாபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்