கொட்டும் மழை.. நனைந்தபடி பள்ளி வந்த பிள்ளைகள்.. பாவப்பட்ட செங்கல்பட்டு மாணவர்கள்!

Nov 30, 2023,08:39 AM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. ஆனால் தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தவிர மற்ற நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை காலையிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிப் பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படாத காரணத்தால் காலையிலிருந்து கொட்டும் கன மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல செங்கல்பட்டிலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கும் சேர்த்தே விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர். நேற்று இரவு,  முதலில் விடுமுறை விடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் சில நிமிடங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியானது. தற்போது  மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால் பார்ப்போர் பரிதாபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்