கொட்டும் மழை.. நனைந்தபடி பள்ளி வந்த பிள்ளைகள்.. பாவப்பட்ட செங்கல்பட்டு மாணவர்கள்!

Nov 30, 2023,08:39 AM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. ஆனால் தற்போது சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தவிர மற்ற நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் சற்று ஓய்ந்த மழை காலையிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிப் பிள்ளைகள்தான். இந்த மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படாத காரணத்தால் காலையிலிருந்து கொட்டும் கன மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல செங்கல்பட்டிலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்துக்கும் சேர்த்தே விடுமுறை விட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர். நேற்று இரவு,  முதலில் விடுமுறை விடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் சில நிமிடங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியானது. தற்போது  மழையில் நனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதால் பார்ப்போர் பரிதாபப்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்