சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரமடைந்ததால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் போட்டி போட்டு பொருட்களை வாங்க கடைகளில் குவிந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் அடுத்த இரண்டு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே மாநகரமே ஸ்தம்பித்தது. இதன் எதிரொலியால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது .இதனால் மக்கள் கரண்ட் இல்லாமல், தண்ணீர் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட மக்கள் இந்த முறையும் இது போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என சூப்பர் மார்க்கெட் மற்றும் மார்க்கெட் களில் போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க செல்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறி சந்தை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் போட்டி போட்டு கொண்டு காய்கறிகளை வாங்க சென்றதால் சில மணி நேரத்திலேயே காய்கறிகள் விற்று தீர்ந்தது. கனமழை காரணமாக மக்களின் தேவை அதிகரித்ததாலும், கடைகளில் போதுமான இருப்பு இல்லாததாலும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அத்யாவசிய பொருட்களை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பிரட், பிஸ்கட் போன்ற பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பதால் தற்போது பற்றாக்குறையால் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
அதேபோல் கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 80க்கு விற்கப்பட்ட நிலையில், 40 ரூபாய் அதிகரித்து இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய்130 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை எதிரொலியாக வெங்காயத்தின் வரத்து குறைந்தால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}