சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
என்னும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும் போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
திருப்புவனம் இளைஞர் கொலை : தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... தடையை மீறி போராடுவேன்... சீமான்!
ரெட் அலார்ட்...கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்
பெங்களுருவில் இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய கும்பலால் பரபரப்பு
அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன்!
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு!
{{comments.comment}}