உள்துறை செயலாளர் அமுதா திடீர் இடமாற்றம்..10 மாவட்ட கலெக்டர்களும் டிரான்ஸ்பர்

Jul 16, 2024,05:16 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராக இருந்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 


10  மாவட்ட கலெக்டர்கள் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


பி. அமுதா இடமாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை ஓய்வு நாளன்று சஸ்பெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமுதா. இதையடுத்து கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.




இந்த நிலையில்தான் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காவல்துறையின் பெயர் இதில் பெருமளவில் டேமேஜ் ஆனது. இதையடுத்து சென்னை போலீஸ் ஆணையர், கூடுதல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது காவல்துறையைக் கவனித்து வரும் உள்துறையின் செயலாளராக இருந்து வந்த அமுதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


முதல்வரின் குட்புக்கில் இருந்து வந்தவர் அமுதா ஐஏஎஸ். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்குகளின் போது கூடவே இருந்து எல்லாப் பணிகளையும் கவனித்துக் கொண்டவர். இதன் மூலம் முதல்வரின் நன்மதிப்பையும் பெற்றவர். தற்போது அவர் சக்தி வாய்ந்த உள்துறைப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பிற இடமாற்ற விவரம்:


சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். என்.எம். சங்கர ராவ், ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜயராணி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலச்சந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக ஹர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக ராஜாராமன் நியமனம்



புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள்:


புதுக்கோட்டை - அருணா, ராணிப்பேட்டை -  சந்திர கலா, அரியலூர் -  ரத்தினசாமி, நீலகிரி - லட்சுமி பாவ்யா தனீரு, தஞ்சாவூர் - பிரியங்கா, நாகப்பட்டனம் - பி.ஆகாஷ், கடலூர் - சிபி ஆதித்யா செந்தில் குமார், கன்னியாகுமரி - அழகு மீனா, பெரம்பலூர் - கிரேஸ் லயிரின்டிகி பேசாவு, ராமநாதபுரம் - சிம்ரஞ்சித் சிங் கெலான், 


கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி அறிவிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்