நொய்டா: வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு, சிக்கன் பிரியாணி டெலிவரி செய்தப்பட்டதாக கண்ணீருடன் பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் சாயா சர்மா.இவர் சமீபத்தில் லக்னோயி கபாப் பரோட்டா ஹோட்டலில் ஸ்விக்கி ஆப் மூலம் வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது . இது தெரியாமல் பிரியாணி பார்சலை திறந்து சாப்பிட்ட பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அது வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சாயா சர்மா கண்ணீருடன் மல்க, நான் ஒரு முழுமையான சைவப்பெண். நவராத்திரியின் போது ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணியை வேண்டுமென்றே டெலிவரி செய்து இருக்கிறார்கள் என சோசியல் மீடியாவில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலானது.
இதனை அறிந்த போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெஜ் பிரியாணிக்கு பதிலாக நான்வெஜ் பிரியாணியை டெலிவரி செய்த ஊழியர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}