நொய்டா: வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு, சிக்கன் பிரியாணி டெலிவரி செய்தப்பட்டதாக கண்ணீருடன் பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் சாயா சர்மா.இவர் சமீபத்தில் லக்னோயி கபாப் பரோட்டா ஹோட்டலில் ஸ்விக்கி ஆப் மூலம் வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது . இது தெரியாமல் பிரியாணி பார்சலை திறந்து சாப்பிட்ட பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அது வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சாயா சர்மா கண்ணீருடன் மல்க, நான் ஒரு முழுமையான சைவப்பெண். நவராத்திரியின் போது ஆர்டர் செய்த வெஜ் பிரியாணிக்கு பதிலாக சிக்கன் பிரியாணியை வேண்டுமென்றே டெலிவரி செய்து இருக்கிறார்கள் என சோசியல் மீடியாவில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலானது.
இதனை அறிந்த போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெஜ் பிரியாணிக்கு பதிலாக நான்வெஜ் பிரியாணியை டெலிவரி செய்த ஊழியர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
{{comments.comment}}