- ரதி தேவி
தென்மாவட்டத் தமிழர்கள் மற்றும் முக்கியமாக விவசாயிகளின் வீட்டில் சமைக்கும் சத்தான எளிமையான குழம்பு சிறுபயறு மற்றும் உளுந்தங்குழம்பு.....
எப்படி செய்வது ரொம்ப எளிது...
சிறுபயறைக் கடாயில் லேசாக உடைபடும் அளவுக்கு வறுக்கவும்...
பிறகு ஆறியவுடன் உடைக்கவும்.... அம்மியில் உடைப்பார்கள் இப்பொழுது மிக்ஸி தான்.. அதனால் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று விட்டு உடைத்ததும் அதன் தோலை நீக்க முறம் கொண்டு புடைத்து.. பின்னர் அதனை பானையில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்...
மண் பானையில் செய்தால் சுவையாக இருக்கும்..... அதனுடன் தேவையான அளவு தக்காளி நறுக்கி போடவும்.....
தேவையான அளவு சிறிதளவு புளி சேர்க்கலாம்.. பிறகு தேவையான மசாலாவுக்கு பின்வருவனவற்றை தேவையான அளவு எடுக்கவும்...

சீரகம்
வற்றல் காய்ந்த மிளகாய்
பால் காயம்
பூண்டு
சின்ன வெங்காயம்
தேங்காய்
கட்டி மஞ்சள்
இவைகளை இடித்து போடவும்.. உரலில் இடித்தால் செம்ம டேஸ்ட்.....
மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு எடுத்து சிறுபயறுடன் கொதிக்க விடவும்.... நன்றாக வேகும் போதே அந்த சிறுபயறு வாசனை சூப்பர்...
வெந்ததும் இறக்கி மத்து வைத்து கடையவும்.... பிறகு விருப்பத்திற்கு ஏற்ப தாளித்து இறக்கி பரிமாறவும்....
சத்தான சிறுபயறு குழம்பு ரெடி....
சமைத்துப் பாருங்கள் சூப்பரா இருக்கும்.....
உடல் நலத்திற்கு மிகவும் நல்லது....
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}