சிவனுக்கு நெய்வேத்யமாக செய்யப்படும் திருவாதிரை களி.. எப்படிச் செய்யணும் தெரியுமா?

Dec 31, 2025,01:11 PM IST

மன்னார்குடி ந. லட்சுமி.


திருவாதிரை அன்று சிவனுக்கு நெய்வேத்திய படைக்கப்படும் பிரசாதம்தான் திருவாதிரை களி. பிரசாதமாக படைப்பதற்கு களி எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறையை இப்போது நமக்கு விளக்குகிறார் மன்னார்குடி ந. லட்சுமி.


தேவையான பொருட்கள்:




1. பச்சரிசி – 1/4 படி(ஒரு டம்ளர் அளவு) ஒரு1/2 மணி நேரம் ஊறவைத்து உலர்த்திக்கொள்ள வேண்டும்.

2. பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

3. வெல்லம் – 3 / 4 கப்

4. தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

5. நெய் – 3 டேபிள் ஸ்பூன்

6. முந்திரி, திராட்சை, ஏலப்பொடி

7. (கடலைப்பருப்பு  தேவை என்றால் ஊற வைத்து போட்டுக் கொள்ளலாம்)


செய்முறை:


1. பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.

2. பிறகு அரிசியை நன்கு சிவக்க வறுக்கவும்.

3. பருப்பு, அரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

4. அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது வேறு  பாத்திரத்தை வைத்து 21/2( இரண்டரை கப்) டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.

5. நன்கு கரைந்து வடிகட்டி, கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும்.

6. அடுப்பை சின்னதாக்கி கட்டி தட்டாமல் நன்கு கிளறவும். தண்ணீர் பத்தவில்லை என்றால் கொஞ்சமாக கொதிக்கும் சுடு தண்ணி ஊற்றிக் கொள்ளலாம்.

7. சிறிது நேரம் மூடி போட்டு வைத்து, இடை இடையே கிளறி விடவும். 

8. வெந்ததும் தேங்காய் துருவல்( சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்)

9. ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்கி வைத்ததும் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மூடி வைத்துவிடவும்.


புகைப்படம் உதவி: https://www.youtube.com/watch?v=826uGsxeC6w


(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

பூமியில் புதைந்த பூலான்தேவி

news

Tamil Poem: புதிய விடியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்