- ஸ்வர்ணலட்சுமி
Cluster beans என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொத்தவரங்காய் துவையல் ஈசியாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க ஃபிரண்ட்ஸ் கிச்சனுக்குள் போகலாம்...
தேவையான பொருட்கள்:
1. கொத்தவரங்காய்- 20
2. கடலை பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3. வர மிளகாய் மூன்று
4. இஞ்சி தோல் நீக்கி கழுவி கட் செய்தது ஒரு ஸ்பூன்
5. சீரகம் ஒரு ஸ்பூன்
6. பெரிய நெல்லிக்காய் ஒன்று (குறிப்பு: அதிகம் புளிப்பு சுவை தேவை எனில் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்)
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
7. தேங்காய் துருவல் மூன்று ஸ்பூன்
8. கருவேப்பிலை மல்லித்தழை கழுவி கட் செய்தது ஒரு கைப்பிடி அளவு
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
குறிப்பு :செக்கு நல்லெண்ணெயாக இருந்தால் நல்லது.

செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
2. பிறகு பொடியாக கட் செய்த கொத்தவரங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும் .அதனுடன் வரமிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். கட் செய்த இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்
3. அடுப்பு அணைத்த பிறகு பொடியாக கட் செய்த பெரிய நெல்லிக்காய் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறவும்
4. சூடு ஆறிய பிறகு இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
5. சூடான சாதம் இட்லி தோசை இவற்றிற்கு சைடிஷ் ஆக வைத்துக்கொள்ள மிகவும் அருமையான ஹெல்தியான துவையல்.
6. குழந்தைகள் காய் பொரியல் சாப்பிடுவதற்கு மாற்றாக இவ்வாறு செய்து கொடுத்து சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்தவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட அருமையான டேஸ்டான ஹெல்தியான கொத்தவரங்காய் துவையல் .வேலைக்கு செல்பவர்கள் ,பேச்சிலர்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் பேக் செய்ய ஈசியாக சட்டென செய்ய கூடிய அருமையான துவையல் .செய்து பார்த்து சுவைத்து பாருங்கள் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு முள்
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
{{comments.comment}}