- ஸ்வர்ணலட்சுமி
வெயில் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது இல்லைங்களா? நம் உடம்பில் சூட்டை தணிக்க கேரட் ஆனியன் தோசை அதற்கு சைட் டிஷ் ஆக மா இஞ்சி தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். வாங்க எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
தோசை மாவு ஒரு கப்
கேரட் 2 துருவிக் கொள்ளவும்
பெரிய வெங்காயம் 3 பொடியாக கட் செய்யவும்
பச்சை மிளகாய் ஒன்று பொடியாக கட் செய்யவும்
மல்லித்தழை கட் செய்தது ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் தேவைக்கு ஏற்ப
செய்முறை
தோசை கல் சூடானதும் தோசை மாவு ஊற்றி அதன் மேல் துருவிய கேரட் வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் லேசாக அதன் மேல் தூவிக் கொள்ளவும் சிறிது எண்ணெய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும் கேரட் தீஞ்சு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவையான கேரட் ஆனியன் தோசை ரெடி. அதற்கு சைடு டிஷ் மா இஞ்சி தேங்காய் சட்னி எப்படி ?செய்வது என்று பார்ப்போமா...
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு கப் ,பச்சை மிளகாய் 2 மல்லித்தழை கைப்பிடி அளவு உப்பு, அரை கப் பொட்டுக்கடலை ஒரு சிறிய துண்டு மா இஞ்சி தோலை சீவி கட் செய்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அருமையான சுவையான மனமனக்கும் மாஇஞ்சி தேங்காய் சட்னி ரெடி. இது ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். ஒருமுறை செய்து பாருங்களேன்.
மேலும் இதுபோன்ற சமையல் குறிப்புகளுக்கு இணைந்திடுங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}