-ஸ்வர்ணலட்சுமி
ரோட்டு கடை தக்காளி தண்ணீர் சட்னி .. கேட்டதுமே சும்மா திகுதிகுன்னு நாக்கு ஊறும்.. அப்படி ஒரு டேஸ்ட்.. நல்லா வழிச்சு சாப்பிடத் தோணும்.. ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க வீட்ல. அப்படி ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் கொண்டது இந்த சட்னி.
சின்ன வெங்காயம், தக்காளி எல்லாம் போட்டுச் செய்யும் இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள் அல்லது எங்கேயாவது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் சட்டென்று செய்ய டேஸ்டியான, தக்காளி பிரியர்களுக்கு விருப்பமானதாகும்.. சரி.. தக்காளி தண்ணீர் சட்னி எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க... பிரண்ட்ஸ் ...கிச்சனுக்குள் போகலாம்....
தேவையான பொருட்கள்:

1. தக்காளி பழம்- 6
2. சின்ன வெங்காயம் 20 உரித்துக் கொள்ளவும்
3. பூண்டு ஆறு பல்
4 .சீரகம் ஒரு ஸ்பூன்
5. வரமிளகாய் 3 (தேவைக்கு ஏற்ப)
6. உப்பு தேவைக்கு ஏற்ப குறிப்பு :இந்து உப்பு பயன்படுத்தினால் நல்லது.
7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
8. கறிவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்* தாளிக்க: கடுகு +உளுத்தம் பருப்பு+ சீரகம் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
1. தக்காளி பழம் நன்றாக கழுவி கட் செய்து கொள்ளவும்.
2 .சின்ன வெங்காயம் பூண்டு உரித்து கழுவிக் கொள்ளவும்.
3. ஒரு குக்கரில் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு ,சீரகம், மஞ்சள் தூள் ,வர மிளகாய், உப்பு ,சிறிது கருவேப்பிலை சேர்த்து, உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும் .இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்.
4. குக்கர் பிரஷர் அடங்கியதும் இவை அனைத்தும் + மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்து சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் பல்ஸ் மோடில் போடவும் .
5. மிக்ஸியில் இருந்து ஒரு சாவின் பவுலுக்கு இந்த சட்னியை மாற்றவும். தக்காளி கருவேப்பிலை, மல்லித்தழை மணம் நன்றாக இருக்கிறதா?....
6. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
7. இந்த தாளிப்பை பவுலில் இருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
நல்ல கலர்ஃபுல்லான, டேஸ்ட்டான புளிப்பான, அருமையான ரோட்டு கடை தக்காளி தண்ணீர் சட்னி ரெடி... இட்லி தோசைக்கு மிகவும் அருமையான சைட் டிஷ் இருக்கும். இட்லி தோசை எக்ஸ்ட்ராவாக வாங்கி சாப்பிடுவார்கள்... தட்டில் வைத்த சூடான இட்லி, தோசை என்று காலியாகி விடும்.
மேலும் பேச்சுலர்ஸ்க்கு, புதிதாக திருமணம் திருமணம் செய்து தனிக்குடுத்தனம் வந்தவர்களுக்கு ஈசியாக இருக்கும் .நீங்களும் செய்து பாருங்கள்... தொடர்ந்து இணைந்திருங்கள் இது போன்ற ரெசிபிகளுக்கு தென்தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}