- பா. பானுமதி
மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம்
மரத்தையும் சகோதரியாய் பார்த்தது
சங்ககால மனிதநேயம்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது
பாரதியின் மனித நேயம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது
வள்ளலாரின் மனித நேயம்
தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்
வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்
தமிழனின் அடையாளம்

வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே
தமிழர் பண்பாடு
மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது
தமிழன் அடையாளம்
மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே
மாநிலத்தின் அடையாளம்
போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது
தமிழன் அடையாளம்
மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே
தமிழன் அடையாளம்
தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த
அற்புதமான தமிழ் வாசகங்களே
தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}