வெளிநாடு போய்.. கஷ்டப்பட்டு ரூ.50 லட்சம் அனுப்பிய கணவன்.. மனைவி செஞ்ச வேலையைப் பாருங்க!

Oct 28, 2023,06:28 PM IST

கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை செய்து கணவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்ப, மனைவியோ கள்ளக்காதலனுடன் ஆட்டம் போட்ட சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜி. இவரது கணவர் பெயர் ரெஜிலின் மனோ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஜிலின் மனோ குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரூ. 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியுள்ளார். 


ஆனால் அஜி, ஒருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், கள்ளக்காதலருடன் ஓடி விட்டதாக ரெஜிலின் மனோ பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 




அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது தான் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதினால் அந்த பணத்தை  பெற்று தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெஜிலின் மனோவின் தாயார்  ராஜம் கூறுகையில்,  என் மகன் வெளிநாட்டிற்கு போய் நான்கு வருடம் ஆகிறது. அவன் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு அனுப்பிய பணத்தை மருமகள் தகாத உறவு வைத்துள்ள நபருக்கு கொடுத்து வருகிறார். 

பிள்ளைகளையும் ஒழுங்காக பார்ப்பதில்லை. தனது 2 பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.


இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்