கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை செய்து கணவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்ப, மனைவியோ கள்ளக்காதலனுடன் ஆட்டம் போட்ட சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜி. இவரது கணவர் பெயர் ரெஜிலின் மனோ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஜிலின் மனோ குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரூ. 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அஜி, ஒருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், கள்ளக்காதலருடன் ஓடி விட்டதாக ரெஜிலின் மனோ பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது தான் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதினால் அந்த பணத்தை பெற்று தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெஜிலின் மனோவின் தாயார் ராஜம் கூறுகையில், என் மகன் வெளிநாட்டிற்கு போய் நான்கு வருடம் ஆகிறது. அவன் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு அனுப்பிய பணத்தை மருமகள் தகாத உறவு வைத்துள்ள நபருக்கு கொடுத்து வருகிறார்.
பிள்ளைகளையும் ஒழுங்காக பார்ப்பதில்லை. தனது 2 பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}