வெளிநாடு போய்.. கஷ்டப்பட்டு ரூ.50 லட்சம் அனுப்பிய கணவன்.. மனைவி செஞ்ச வேலையைப் பாருங்க!

Oct 28, 2023,06:28 PM IST

கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை செய்து கணவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்ப, மனைவியோ கள்ளக்காதலனுடன் ஆட்டம் போட்ட சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜி. இவரது கணவர் பெயர் ரெஜிலின் மனோ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஜிலின் மனோ குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரூ. 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியுள்ளார். 


ஆனால் அஜி, ஒருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், கள்ளக்காதலருடன் ஓடி விட்டதாக ரெஜிலின் மனோ பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 




அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது தான் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதினால் அந்த பணத்தை  பெற்று தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெஜிலின் மனோவின் தாயார்  ராஜம் கூறுகையில்,  என் மகன் வெளிநாட்டிற்கு போய் நான்கு வருடம் ஆகிறது. அவன் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு அனுப்பிய பணத்தை மருமகள் தகாத உறவு வைத்துள்ள நபருக்கு கொடுத்து வருகிறார். 

பிள்ளைகளையும் ஒழுங்காக பார்ப்பதில்லை. தனது 2 பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.


இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்