கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை செய்து கணவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்ப, மனைவியோ கள்ளக்காதலனுடன் ஆட்டம் போட்ட சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜி. இவரது கணவர் பெயர் ரெஜிலின் மனோ. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரெஜிலின் மனோ குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து ரூ. 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அஜி, ஒருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு அந்தப் பணத்தை குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், கள்ளக்காதலருடன் ஓடி விட்டதாக ரெஜிலின் மனோ பரபரப்பான புகாரைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது தான் ஊருக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதினால் அந்த பணத்தை பெற்று தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெஜிலின் மனோவின் தாயார் ராஜம் கூறுகையில், என் மகன் வெளிநாட்டிற்கு போய் நான்கு வருடம் ஆகிறது. அவன் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு அனுப்பிய பணத்தை மருமகள் தகாத உறவு வைத்துள்ள நபருக்கு கொடுத்து வருகிறார்.
பிள்ளைகளையும் ஒழுங்காக பார்ப்பதில்லை. தனது 2 பேரப்பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}