தம்பி செய்த அக்கிரமம்.. மனைவி மீது பாய்ந்த கணவர்.. நெஞ்சில் ஏறி அமர்ந்து.. அதிர வைத்த வீடியோ!

Apr 28, 2024,12:20 PM IST

முசாபர்நகர், உத்தரப் பிரதேசம்: தனது மனைவியை தம்பி பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது தம்பி மீது கோபப்படுவதை விட்டு விட்டு, மனைவியைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மனைவி மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார் அந்த நபர். அதை அந்த நபரின் தம்பியே வீடியோவிலும் பதிவு செய்ததுதான் அதை விட பெரிய அதிர்ச்சியாகும். இந்த கொலைகார வன்மக் கும்பலிடமிருந்து தப்பியுள்ளார் அப்பெண். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணன் தம்பி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.


ஏப்ரல் 2 அந்தப் பெண்ணை, கணவரின் தம்பி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.  கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது தம்பி இந்த அக்கிரமத்தை செய்துள்ளார். கணவர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரிடம் கூறி அழுதுள்ளார் அப்பெண். வழக்கமாக இது மாதிரி நடந்தால் தவறு செய்தவர்கள் மீதுதானே எல்லோருக்கும் கோபம் வரும்.. ஆனால் அந்த கணவரோ, மனைவியைப் பார்த்து, இதுக்கு மேலேயும் நீ என்னோட மனைவி கிடையாது. என்னோட தம்பி மனைவி நீ என்று கூறி அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.




அடுத்த நாள் கணவரும் அவரது தம்பியும் ஒரு சேர அறைக்குள் நுழைந்துள்ளனர். தனது மனைவியை கணவர் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு கழுதைத நெரித்துக் கொல்ல முயற்சித்துள்ளார். அதைத் தம்பி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.


அந்தப் பெண் சிரமப்பட்டு போராடி அவர்களிடமிருந்து விடுபட்டு வெளியேறி தப்பியுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியதால் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன் தம்பி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அவர்களைத் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்