- சகோ. வினோத்குமார்
கோவா: கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்து நடித்து வருவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அவர் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் தான் நடிகராகவே இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ( Internationa Film Festival of India ) என்பது 1952 ஆம் ஆண்டு மும்பையில் முதல் முறையாக ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக 1961 ஆம் ஆண்டு இயக்குனர் சத்திய ஜித்ரே அவர்கள் தலைமையில் நடந்த விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதற்குப் பிறகு இந்த விழாவிற்கு சர்வதேச தரம் அளிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழா மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான விழாவான 56 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வருவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்போது வரை அவர் 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, நான் 50 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் பத்து வருடங்கள் கடந்தது போல் தான் உள்ளது. இன்னும் நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் நான் ரஜினிகாந்தாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை இந்த அளவுக்கு உயர்த்திய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மிக முக்கியமாக என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி" என உருக்கமாக பேசி உள்ளார்.
170 படங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நடித்து வரும் ரஜினிகாந்த் அவர்கள் 2000 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 2016 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயர்ந்த விருதாக கருதப்படும் 2019 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ச.கோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}