18 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை.. பருவ மழை தீவிரமடைகிறது.. வானிலை மையம் தகவல்

Nov 15, 2024,04:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் இதனால்  இன்று 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, சேலம், நெல்லை ,நாமக்கல், மயிலாடுதுறை, சீர்காழி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லையில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 16, 17 ,18 ,21, ஆகிய நான்கு தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்