1 மணி வரை இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழை இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Dec 01, 2024,12:00 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் ஒரு வழியாக முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து விட்ட நிலையில் பிற்பகல் 1 மணி வரைக்குமான காலகட்டத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது வானினிலை மையம்.


வங்கக் கடலில் மிரட்டிக் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் தற்போது முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து ஆழ்ந்த காற்றவுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி விட்டது. இதனால் படிப்படியாக மழை அளவு குறையக் கூடும். இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்குள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.




அதேபோல கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்