சென்னை: ஃபெஞ்சல் புயல் ஒரு வழியாக முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து விட்ட நிலையில் பிற்பகல் 1 மணி வரைக்குமான காலகட்டத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது வானினிலை மையம்.
வங்கக் கடலில் மிரட்டிக் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் தற்போது முழுமையாக நிலப் பகுதிக்குள் நகர்ந்து ஆழ்ந்த காற்றவுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி விட்டது. இதனால் படிப்படியாக மழை அளவு குறையக் கூடும். இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்குள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை
Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?
வெப்பமே என் வெப்பமே...!
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
{{comments.comment}}