சென்னை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் கோடை காலம் தொடங்கி ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதற்கிடையே ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
அதன்படி, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது அக்னி நட்சத்திர காலமான மே மாதத்தில் வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயில் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமோ என மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்
இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே இறுதியில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
அதாவது மே 13ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}