இந்தியாவிலிருந்து சென்ற பஸ்.. நேபாள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. 14 பேர் பலி

Aug 23, 2024,01:41 PM IST

காத்மாண்டு:    இந்தியாவிலிருந்து சென்ற பஸ் நேபாள நாட்டில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. நேபாள நாட்டின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்சியாங்கிடி ஆற்றைக் கடக்க முயன்றபோது பஸ் ஆற்றுக்குள் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.




இந்தப் பேருந்தானது காத்மாண்டுவிலிருந்து பொக்காரா நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பேருந்தின் பதிவு எண் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


இப்படித்தான் கடந்த மாதம் நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் நடந்த பெரும் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் 2  பஸ்கள் கவிழ்ந்தன. அந்த விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்