ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!

Sep 08, 2024,06:05 PM IST

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்,  ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றவுள்ளார். இதற்காக இந்த வார இறுதியில் அவர் ரஷ்யா செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது. 


ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் அந்த இரு நாடுகளுக்கும் இதுவரை வெற்றி தரவில்லை. மாறாக பெரும் இழப்பையே ஏற்படுத்தி வருகிறது. பல அப்பாவிகளின் உயிர்கள்தான் தேவையில்லாமல் பறி போயுள்ளன. இந்த நிலையில் இந்தப் போரை நிறுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா தீவிர அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த சமரச முயற்சியில் இறங்கியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி, முதலில்  ரஷ்யாவுக்குச் சென்றார். பின்னர் உக்ரைன் நாட்டுக்கும் போயிருந்தார். இதன் மூலம் சமரச முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருவது உறுதியானது. உக்ரைனுடனான போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக புடினும் கூட விளக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தப் பேச்சுக்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.




இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இந்த வார இறுதியில் மாஸ்கோ செல்லவுள்ளார். முக்கியப் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்கவுள்ளார். உக்ரைன் போய் விட்டு வந்த பிறகு ஆகஸ்ட் 27ம் தேதி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து தற்போது அஜீத் தோவலின் மாஸ்கோ பயணம் நடைபெறவுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.


இந்தியா தவிர சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் கூட ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இதுதவிர இத்தாலியும் கூட இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா, இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும். விரைவில் இந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்