மும்பை: புத்தாண்டு தினமான டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சொமாட்டோ நிறுவனத்திலிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவுகளைப் பெற்றுக் கொண்டார், உணவு கொண்டு வந்த ஊழியர்களுக்கு டிப்ஸாக ரூ. 97 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை சொமாட்டோ நிறுவன உரிமையாளர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளனர். நன்றி இந்தியர்களே நீங்கள் எங்களது டெலிவரி ஊழியர்களுக்குக் கொடுத்த டிப்ஸ் ரூ. 97 லட்சத்தைத் தாண்டி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை பலரும் வரவேற்றுள்ளனர். உங்களது ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு டிப்ஸ் பொருத்தமானதே. இந்தத் தகவலால் சூப்பர் ஹேப்பி என்று பலர் கருத்திட்டுள்ளனர்.
இதேபோல இன்னொரு தகவலையும் பகிர்ந்துள்ளார் கோயல். அதாவது 2015, 16, 17, 18, 19, 20 ஆகிய ஆண்டுகளில் புத்தாண்டு சமயத்தின்போது ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் மொத்த அளவுக்கு 2023 புத்தாண்டின்போது சொமாட்டோ மூலமாக மக்கள் ஆர்டர் செய்துள்ளனராம். எதிர்காலம் குறித்து மிகவும் சிலிர்ப்பாக உள்ளதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வருடா வருடம் மிகப் பெரிதாக போய்க் கொண்டிருக்கிறது. முன்பை விட இப்போது அதிக அளவிலான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பார்ட்டிகள் அதிகரித்து விட்டது. விருந்தோம்பலும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்றவை வந்த பிறகு இது அதிகரித்து விட்டதுஎன்று சொல்ல வேண்டும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}