மும்பை: புத்தாண்டு தினமான டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சொமாட்டோ நிறுவனத்திலிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவுகளைப் பெற்றுக் கொண்டார், உணவு கொண்டு வந்த ஊழியர்களுக்கு டிப்ஸாக ரூ. 97 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை சொமாட்டோ நிறுவன உரிமையாளர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளனர். நன்றி இந்தியர்களே நீங்கள் எங்களது டெலிவரி ஊழியர்களுக்குக் கொடுத்த டிப்ஸ் ரூ. 97 லட்சத்தைத் தாண்டி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை பலரும் வரவேற்றுள்ளனர். உங்களது ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு டிப்ஸ் பொருத்தமானதே. இந்தத் தகவலால் சூப்பர் ஹேப்பி என்று பலர் கருத்திட்டுள்ளனர்.
இதேபோல இன்னொரு தகவலையும் பகிர்ந்துள்ளார் கோயல். அதாவது 2015, 16, 17, 18, 19, 20 ஆகிய ஆண்டுகளில் புத்தாண்டு சமயத்தின்போது ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் மொத்த அளவுக்கு 2023 புத்தாண்டின்போது சொமாட்டோ மூலமாக மக்கள் ஆர்டர் செய்துள்ளனராம். எதிர்காலம் குறித்து மிகவும் சிலிர்ப்பாக உள்ளதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வருடா வருடம் மிகப் பெரிதாக போய்க் கொண்டிருக்கிறது. முன்பை விட இப்போது அதிக அளவிலான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பார்ட்டிகள் அதிகரித்து விட்டது. விருந்தோம்பலும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்றவை வந்த பிறகு இது அதிகரித்து விட்டதுஎன்று சொல்ல வேண்டும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}