இல்லங்கள் தோறும் சக்கரவர்த்தியாய்!

Nov 19, 2025,05:02 PM IST

- ரேணுகா ராயன்


ஓங்கி வளர்ந்து நிற்கும் 

மரத்தின் செழுமையை

காணும் கண்கள் - அதை 

தாங்கிப் பிடிக்கும் வேரின் 

உழைப்பை அறிவதில்லை...


உச்சி கிளைகளில் 

 எழிலாய் தொங்கும்

 கூடுகளில் ஒளிந்திருக்கும் 

ஆண் பறவையின் அர்ப்பணிப்பு

பெரிதாய் தெரிவதில்லை 




பெண் குளவி இட்ட 

முட்டைகளை பேணி காத்து உயிர்விடும் ஆண் குளவிகளின்

உயிர் தியாகம் வெளிச்சத்திற்கு வருவததே இல்லை 


ஒவ்வொரு பெண்ணின் 

மகிழ்ச்சியான சிரிப்புக்கு 

பின்னால் ஒரு ஆண் ஓயாது உழைக்கிறான். 


தன்னை உருவாக்கிய மற்றும் தனக்காக உருவான குடும்பங்களுக்காக 

 உழைப்பதைத் தவிர

 வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லை என்று இயங்கும் 

மகாத்மாக்கள். 


இதைப் புரிந்து கொண்ட உறவுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படும் ஆண் 

மன்னாதி மன்னனே.... 


உழைப்பை தருவேன்- தன்னை தருவதற்கு இல்லை என்போராலும் 

குடும்பத்தை தாங்கி பிடிக்காத சோம்பேறிகளாலும், 

கேடுகள் நிறை பழக்கத்தால் உறவுகளை சந்தியில் நிறுத்துவோராலும்

மொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது ஆண்களின் தியாகங்கள். 


குடும்ப பொருளாதாரம்,

உறவுகளின் நிம்மதி,

சமூகப் பொறுப்பு -என்று 

வாழும் ஆண்கள் எப்போதும் 

அன்பின் அங்கீகாரத்தோடு 

ராஜவலம் வருகின்றனர்.

 

இல்லங்கள் தோறும்

சக்கரவர்த்தியாய் வாழும் ஆண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நினைவு ஒரு இனிமை!

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்