- ரேணுகா ராயன்
ஓங்கி வளர்ந்து நிற்கும்
மரத்தின் செழுமையை
காணும் கண்கள் - அதை
தாங்கிப் பிடிக்கும் வேரின்
உழைப்பை அறிவதில்லை...
உச்சி கிளைகளில்
எழிலாய் தொங்கும்
கூடுகளில் ஒளிந்திருக்கும்
ஆண் பறவையின் அர்ப்பணிப்பு
பெரிதாய் தெரிவதில்லை

பெண் குளவி இட்ட
முட்டைகளை பேணி காத்து உயிர்விடும் ஆண் குளவிகளின்
உயிர் தியாகம் வெளிச்சத்திற்கு வருவததே இல்லை
ஒவ்வொரு பெண்ணின்
மகிழ்ச்சியான சிரிப்புக்கு
பின்னால் ஒரு ஆண் ஓயாது உழைக்கிறான்.
தன்னை உருவாக்கிய மற்றும் தனக்காக உருவான குடும்பங்களுக்காக
உழைப்பதைத் தவிர
வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லை என்று இயங்கும்
மகாத்மாக்கள்.
இதைப் புரிந்து கொண்ட உறவுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படும் ஆண்
மன்னாதி மன்னனே....
உழைப்பை தருவேன்- தன்னை தருவதற்கு இல்லை என்போராலும்
குடும்பத்தை தாங்கி பிடிக்காத சோம்பேறிகளாலும்,
கேடுகள் நிறை பழக்கத்தால் உறவுகளை சந்தியில் நிறுத்துவோராலும்
மொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது ஆண்களின் தியாகங்கள்.
குடும்ப பொருளாதாரம்,
உறவுகளின் நிம்மதி,
சமூகப் பொறுப்பு -என்று
வாழும் ஆண்கள் எப்போதும்
அன்பின் அங்கீகாரத்தோடு
ராஜவலம் வருகின்றனர்.
இல்லங்கள் தோறும்
சக்கரவர்த்தியாய் வாழும் ஆண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}