- ரேணுகா ராயன்
ஓங்கி வளர்ந்து நிற்கும்
மரத்தின் செழுமையை
காணும் கண்கள் - அதை
தாங்கிப் பிடிக்கும் வேரின்
உழைப்பை அறிவதில்லை...
உச்சி கிளைகளில்
எழிலாய் தொங்கும்
கூடுகளில் ஒளிந்திருக்கும்
ஆண் பறவையின் அர்ப்பணிப்பு
பெரிதாய் தெரிவதில்லை

பெண் குளவி இட்ட
முட்டைகளை பேணி காத்து உயிர்விடும் ஆண் குளவிகளின்
உயிர் தியாகம் வெளிச்சத்திற்கு வருவததே இல்லை
ஒவ்வொரு பெண்ணின்
மகிழ்ச்சியான சிரிப்புக்கு
பின்னால் ஒரு ஆண் ஓயாது உழைக்கிறான்.
தன்னை உருவாக்கிய மற்றும் தனக்காக உருவான குடும்பங்களுக்காக
உழைப்பதைத் தவிர
வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லை என்று இயங்கும்
மகாத்மாக்கள்.
இதைப் புரிந்து கொண்ட உறவுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படும் ஆண்
மன்னாதி மன்னனே....
உழைப்பை தருவேன்- தன்னை தருவதற்கு இல்லை என்போராலும்
குடும்பத்தை தாங்கி பிடிக்காத சோம்பேறிகளாலும்,
கேடுகள் நிறை பழக்கத்தால் உறவுகளை சந்தியில் நிறுத்துவோராலும்
மொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது ஆண்களின் தியாகங்கள்.
குடும்ப பொருளாதாரம்,
உறவுகளின் நிம்மதி,
சமூகப் பொறுப்பு -என்று
வாழும் ஆண்கள் எப்போதும்
அன்பின் அங்கீகாரத்தோடு
ராஜவலம் வருகின்றனர்.
இல்லங்கள் தோறும்
சக்கரவர்த்தியாய் வாழும் ஆண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}