இல்லங்கள் தோறும் சக்கரவர்த்தியாய்!

Nov 19, 2025,05:02 PM IST

- ரேணுகா ராயன்


ஓங்கி வளர்ந்து நிற்கும் 

மரத்தின் செழுமையை

காணும் கண்கள் - அதை 

தாங்கிப் பிடிக்கும் வேரின் 

உழைப்பை அறிவதில்லை...


உச்சி கிளைகளில் 

 எழிலாய் தொங்கும்

 கூடுகளில் ஒளிந்திருக்கும் 

ஆண் பறவையின் அர்ப்பணிப்பு

பெரிதாய் தெரிவதில்லை 




பெண் குளவி இட்ட 

முட்டைகளை பேணி காத்து உயிர்விடும் ஆண் குளவிகளின்

உயிர் தியாகம் வெளிச்சத்திற்கு வருவததே இல்லை 


ஒவ்வொரு பெண்ணின் 

மகிழ்ச்சியான சிரிப்புக்கு 

பின்னால் ஒரு ஆண் ஓயாது உழைக்கிறான். 


தன்னை உருவாக்கிய மற்றும் தனக்காக உருவான குடும்பங்களுக்காக 

 உழைப்பதைத் தவிர

 வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லை என்று இயங்கும் 

மகாத்மாக்கள். 


இதைப் புரிந்து கொண்ட உறவுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படும் ஆண் 

மன்னாதி மன்னனே.... 


உழைப்பை தருவேன்- தன்னை தருவதற்கு இல்லை என்போராலும் 

குடும்பத்தை தாங்கி பிடிக்காத சோம்பேறிகளாலும், 

கேடுகள் நிறை பழக்கத்தால் உறவுகளை சந்தியில் நிறுத்துவோராலும்

மொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது ஆண்களின் தியாகங்கள். 


குடும்ப பொருளாதாரம்,

உறவுகளின் நிம்மதி,

சமூகப் பொறுப்பு -என்று 

வாழும் ஆண்கள் எப்போதும் 

அன்பின் அங்கீகாரத்தோடு 

ராஜவலம் வருகின்றனர்.

 

இல்லங்கள் தோறும்

சக்கரவர்த்தியாய் வாழும் ஆண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்