IPL 2025 Final...விராத் அவுட்...கை நழுவி போன சாதனை...ரசிகர்கள் ஏமாற்றம்

Jun 03, 2025,11:32 PM IST

ஆமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் விராத் கோலி 43 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைய வைத்துள்ளது. அவர் சாதனை படைப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.


ஐபிஎல் டி டுவென்டி 2025 பைனல் போட்டியில் இன்று பெங்களுரு - பஞ்சாப் அணிகள் மோதி  வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களுரு அணி அதிரடியாக ரன்களை குவித்த போதும், மற்றொரு புறம் விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது. இருந்தாலும் பெங்களுரு அணியின் விராத் கோலி நிதானமாக ஆடி வந்தார். இதனால் இன்றைய போட்டியில் அவர் வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராத் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். இதுவரை மொத்தமாக 8000க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் 2016ம் ஆண்டு நடைபெற்ற 973 ரன்களும், 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்களும் விராத் அடித்துள்ளார். இதுவரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 700 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.




விராத் 2024ல் 741 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 614 ரன்கள் அடித்திருந்தார். இன்றைய பைனலில் 86 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராத் பெற்றிருப்பார். அவர் இன்று நிதானித்து ஆடியதால் சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பதனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 43 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். விராத் சாதனையை கை நழுவ விட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்