ஆமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் விராத் கோலி 43 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைய வைத்துள்ளது. அவர் சாதனை படைப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஐபிஎல் டி டுவென்டி 2025 பைனல் போட்டியில் இன்று பெங்களுரு - பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களுரு அணி அதிரடியாக ரன்களை குவித்த போதும், மற்றொரு புறம் விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது. இருந்தாலும் பெங்களுரு அணியின் விராத் கோலி நிதானமாக ஆடி வந்தார். இதனால் இன்றைய போட்டியில் அவர் வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராத் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். இதுவரை மொத்தமாக 8000க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் 2016ம் ஆண்டு நடைபெற்ற 973 ரன்களும், 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்களும் விராத் அடித்துள்ளார். இதுவரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 700 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.
விராத் 2024ல் 741 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 614 ரன்கள் அடித்திருந்தார். இன்றைய பைனலில் 86 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராத் பெற்றிருப்பார். அவர் இன்று நிதானித்து ஆடியதால் சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பதனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 43 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். விராத் சாதனையை கை நழுவ விட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!
குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?
மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை
வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!
{{comments.comment}}