IPL 2025 Final...விராத் அவுட்...கை நழுவி போன சாதனை...ரசிகர்கள் ஏமாற்றம்

Jun 03, 2025,11:32 PM IST

ஆமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் விராத் கோலி 43 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைய வைத்துள்ளது. அவர் சாதனை படைப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.


ஐபிஎல் டி டுவென்டி 2025 பைனல் போட்டியில் இன்று பெங்களுரு - பஞ்சாப் அணிகள் மோதி  வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களுரு அணி அதிரடியாக ரன்களை குவித்த போதும், மற்றொரு புறம் விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது. இருந்தாலும் பெங்களுரு அணியின் விராத் கோலி நிதானமாக ஆடி வந்தார். இதனால் இன்றைய போட்டியில் அவர் வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராத் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். இதுவரை மொத்தமாக 8000க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் 2016ம் ஆண்டு நடைபெற்ற 973 ரன்களும், 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்களும் விராத் அடித்துள்ளார். இதுவரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 700 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.




விராத் 2024ல் 741 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 614 ரன்கள் அடித்திருந்தார். இன்றைய பைனலில் 86 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராத் பெற்றிருப்பார். அவர் இன்று நிதானித்து ஆடியதால் சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பதனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 43 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். விராத் சாதனையை கை நழுவ விட்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்