க.யாஸ்மின் சிராஜூதீன்
அலைபேசியிலே உலாவரும்
உறக்கம் இல்லா தபால்காரர்...
செய்திகளை சுமந்து அலையிலே
வந்திடுவான்....
கண்ணிமைக்கும் கணத்திலே
தந்திடுவான்....
புலனத்திலே கைவிரல்கள் ஆட்டம் போட....
கண்ணிமைக்காமல் பார்வை அதிலேஆழ....
பார்வைக் குறைபாடு வருமென்று
தெரிந்தும்..தவிர்க்க முடியா அலைபேசியின் அலையே....
நீ வரமா இல்லை சாபமா....

சாப்பாடு கூட இல்லாமல் இருப்பரே
புலனம் பார்க்காமல் இருப்பவர் உளரோ....
நிமிடத்திற்கு நிமிடம் கண்கள் தேடும்
புலனத்தில் செய்தியை....
.ஓய்வில்லா தபால்காரனாய் புலனம் அலைபேசி வாசலிலே ....
கையில் ஏந்திப் படிக்கும் தபாலில்
உள்ள இன்பம் எங்கே தொலைந்து
போனதோ ...
அலைபேசி புலனம் வெற்றி கொண்டதோ...
வருகுதோ...
நன்மை தீமை இரண்டும் உண்டு
நாம் அறியனும்...
தேவைக்கு பயன்படுத்தி தேகம்
காக்கனும்....
அறிவியல் வளர்ச்சி வளமாக்குமே
வாழ்கை சிறக்க பயன்படுத்தி
பயனடைவோமே....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}