க.யாஸ்மின் சிராஜூதீன்
அலைபேசியிலே உலாவரும்
உறக்கம் இல்லா தபால்காரர்...
செய்திகளை சுமந்து அலையிலே
வந்திடுவான்....
கண்ணிமைக்கும் கணத்திலே
தந்திடுவான்....
புலனத்திலே கைவிரல்கள் ஆட்டம் போட....
கண்ணிமைக்காமல் பார்வை அதிலேஆழ....
பார்வைக் குறைபாடு வருமென்று
தெரிந்தும்..தவிர்க்க முடியா அலைபேசியின் அலையே....
நீ வரமா இல்லை சாபமா....

சாப்பாடு கூட இல்லாமல் இருப்பரே
புலனம் பார்க்காமல் இருப்பவர் உளரோ....
நிமிடத்திற்கு நிமிடம் கண்கள் தேடும்
புலனத்தில் செய்தியை....
.ஓய்வில்லா தபால்காரனாய் புலனம் அலைபேசி வாசலிலே ....
கையில் ஏந்திப் படிக்கும் தபாலில்
உள்ள இன்பம் எங்கே தொலைந்து
போனதோ ...
அலைபேசி புலனம் வெற்றி கொண்டதோ...
வருகுதோ...
நன்மை தீமை இரண்டும் உண்டு
நாம் அறியனும்...
தேவைக்கு பயன்படுத்தி தேகம்
காக்கனும்....
அறிவியல் வளர்ச்சி வளமாக்குமே
வாழ்கை சிறக்க பயன்படுத்தி
பயனடைவோமே....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}