புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடையாள அட்டை இன்றி சிலர் மேடையில் ஏறியதாக கூறி இரண்டு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி, வடமாடு இழுத்தல், உள்ளிட்ட வீர விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இது தான் இந்த ஆண்டில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். அதாவது தச்சன்குறிச்சியில் விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு நிகழ்ச்சியுடன் பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பொங்கல் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரங்கமே அதிரும் அளவில் மோதலுடன் தொடங்கியது. ஏனெனில் ஜல்லிக்கட்டு மேடையில் அடையாள அட்டையின்றி சிலர் ஏறியதால் விழா குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் பிரித்து சமரசம் பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஜல்லிக்கட்டை காண வந்த மக்கள் விழாக்குழுவினரின் மல்லுக்கட்டையும் சேர்த்து குதூகலமாக பார்த்து மகிழ்ந்து விட்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}