ஜல்லிக்கட்டுக்கு போன இடத்தில் மல்லுக்கட்டு...புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு

Jan 04, 2025,07:12 PM IST

புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடையாள அட்டை இன்றி சிலர் மேடையில் ஏறியதாக கூறி இரண்டு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி, வடமாடு இழுத்தல், உள்ளிட்ட  வீர விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.




அந்த வகையில் இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இது தான் இந்த ஆண்டில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். அதாவது தச்சன்குறிச்சியில் விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு நிகழ்ச்சியுடன் பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பொங்கல் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


இந்த நிலையில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே  அரங்கமே அதிரும் அளவில் மோதலுடன் தொடங்கியது. ஏனெனில் ஜல்லிக்கட்டு மேடையில் அடையாள அட்டையின்றி சிலர் ஏறியதால் விழா குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் பிரித்து சமரசம் பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


ஜல்லிக்கட்டை காண வந்த மக்கள் விழாக்குழுவினரின் மல்லுக்கட்டையும் சேர்த்து குதூகலமாக பார்த்து மகிழ்ந்து விட்டு சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்