ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

Oct 25, 2024,09:43 AM IST

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் நவம்பர் மாதம் 10ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


6 மாத காலம் மட்டுமே சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் அடுத்தாண்டு மே 13ம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.


தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்காவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.




உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியாக பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு கூறியவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. இதுவரை 456 அமர்வுகளில் கலந்து கொண்டு 117 தீர்ப்புகளை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழங்கியுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய வழக்கு, விவிபேட் தொடர்பான வழக்கு, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பு வழங்கிய பெஞ்ச்சில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.


அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும்  மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பு கூறிய பெஞ்ச்சில் இடம் பெற்றவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்