டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் நவம்பர் மாதம் 10ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 மாத காலம் மட்டுமே சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் அடுத்தாண்டு மே 13ம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்காவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியாக பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு கூறியவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. இதுவரை 456 அமர்வுகளில் கலந்து கொண்டு 117 தீர்ப்புகளை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழங்கியுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய வழக்கு, விவிபேட் தொடர்பான வழக்கு, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பு வழங்கிய பெஞ்ச்சில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பு கூறிய பெஞ்ச்சில் இடம் பெற்றவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
{{comments.comment}}