துரோகம்!

Aug 12, 2026,01:12 PM IST

- கவி கலை

 

துரத்திக் குத்தினாலும்  

துயரென எண்ணாமல் 

துரிதமாய் உதவிடு. 

 

தவறின்றித் துப்பினாலும்  

தயங்காமல் துடைத்து 

தவமாய் முகம் கொடு . 

 

பகைவன் பகைத்தாலும்  

பாரமாய் இருந்தாலும்  

பக்குவமாய் பயணப்படு. 


 


நேருக்கு நேர் இகழும்  

நேர்மையான மனிதரை  

நேர்த்தியாக ஏற்றிடு . 

 

தோள் மீது சாய்ந்து  

தோலுரிக்கும் துரோகம்  

தொடராமல் காத்திடு.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்