- சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சித் தலைவர் பிரசாந்த் விடுத்துள்ள அறிவுரை அறிக்கை:

வடகிழக்கு பருவமழை 2025, "டிட்வா" புயல் காரணமாக 29.11.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு "ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மழை சேதம் தொடர்பான புகார்களை தெரிவிக்க: 1077 04151 228801 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதவிர பொதுமக்கள் மழைக்காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கலெக்டர் எம். எஸ். பிரசாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை
காய்ச்சி வடிகட்டிய நீரை பயன்படுத்தவும்.
சூடான உணவுகளை மட்டும் உண்ணவும்.
உடனடியாக தேவைப்படும் மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சூப், ரசம், பால், டீ, காபி போன்ற திரவ உணவுகளை அருந்தவும்
வீட்டின் மின்விளக்குகளை கவனமாக கையாளவும்.
உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பொதுமக்கள் மழைக்காலங்களில் செய்ய கூடாதவை
- பழச்சாறுகள் , ஐஸ்கிரீம், குளிர் குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்ணும் உணவுகளை தவிர்க்கவும்
- மின்மாற்றிகள், மின்கம்பிகள் , மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்
- மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும்
- இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, ஃபோன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்
- வீட்டு சுவரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் உடனே சரி செய்யவும்
- பச்சை மரங்களுக்கு இடையே நிற்க வேண்டாம்
- வீட்டுக்குள் மின்சார எரிவாயுவை அணைக்கவும்
- கதவுகளை ஜன்னல்களை மூடி வைக்கவும்
- பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்
- சேதமடைந்த கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம்
- அதிகாரபூர்வ அறிவிப்பு செய்திகள் மட்டுமே நம்பவும்
எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}