கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆற்றங்கரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பலூன் கடை ஒன்றில், பலூன்களில் கேஸ் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட ஹீலியம் கேஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த விபத்து நடந்த இடத்திலேயே சிறுவன் உட்பட 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த திருவிழா காலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த துயரமான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}