தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்

Feb 05, 2025,02:35 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


போராளி சுப்புவின்,

திடீர் மரண செய்தி...!!!


காட்டுத்தீயாய்...!!!

கந்துப்பட்டி முழுவதும்...

காற்றாக  பரவியது.


அனுதாப அலைகள் எங்கும்...!!!

ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...!!!


சுப்புவின் இளம்  மனைவிக்கு ...

கட்சித் தலைவர்களின் ஆறுதல்..!!!


சுப்புவின் குடும்பத்தை,

தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!

தலைவரின் அறிவிப்பு..!!!




சுப்புவின் சடலத்திற்கு ...

கட்சி தலைமையிடத்திலிருந்து...


ஆயிரம் மாலைகள்..!!!

அரசு மரியாதையுடன்...,

அடக்கம் செய்யப்பட்டது சடலம்..!!!


தத்தெடுத்த சுப்புவின் வீட்டிற்கு...

தலைவர்களின் அணிவகுப்பு..!!!


குடும்ப நலம் விசாரிக்க..!!!

குடும்பத்தின் தேவையினை அறிய...!!!


பிரம்மாண்டமாய்...!!! பத்திரிகைகளில் 

பாராட்டுக்கள்..!! இச்செய்தி குறித்து.


ஒரு மாதத்திற்குப் பின்,

ஒரு கோரிக்கை வைத்து ...!!!


உதவி கேட்டாள்  சுப்புவின் மனைவி .

உடனே நாளை வா...!! 

நல்லது சொல்கிறேன் என,

நவின்றார்...!!!கட்சியின் எம்எல்ஏ.


மறுநாள் சென்றாள்..!!

மாறுபட்டு பேசினார்..!!

 

இருப்புக் கொள்ளவில்லை.

இவளுக்கு...!!!


தனது கோரிக்கை குறித்து  ,

தாளாமல் அவசரப்பட்டாள்..!!


ஏன் அவசரப் படுற...???

கொஞ்சம் இரு ....!! என்று..

எட்டி கையைப் பிடித்தான்..!!

ஒரு நமட்டு சிரிப்புடன்..!!


சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!

சட்டென்று நினைவில் வந்தது..!!!


சுட்டாள் கண்களால்..!! 

சூடு தாங்காமல்....


மறுவாரம் மாலை..!!

மகிழ்வோடு  வரச்சொன்னான்..!!


கனத்த மனத்தோடு நடந்தாள்.

கணவரின் மரணமும்..!!!

கணவரின் சடலத்துக்கு கிடைத்த ...


மாலை மரியாதைகளும்..!!!

மனக்கண்முன் வந்து...

மனசு  கனத்தது..!!


ஆறாத மனதுடன்....

ஆற்றங் கரையில் ,

அமர்ந்திருக்கும்....


கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....

கால்கள் நடந்தன..!!


கல்லுப் பிள்ளையாரிடம் ,

கவலைகள் அனைத்தையும் கொட்டி ...

தன் மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,


தன்னம்பிக்கையுடன் ,

தைரியமாய் நடந்தாள் ..!!

தன் கோரிக்கையை வென்றெடுக்க..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்