தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்

Feb 05, 2025,02:35 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


போராளி சுப்புவின்,

திடீர் மரண செய்தி...!!!


காட்டுத்தீயாய்...!!!

கந்துப்பட்டி முழுவதும்...

காற்றாக  பரவியது.


அனுதாப அலைகள் எங்கும்...!!!

ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...!!!


சுப்புவின் இளம்  மனைவிக்கு ...

கட்சித் தலைவர்களின் ஆறுதல்..!!!


சுப்புவின் குடும்பத்தை,

தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!

தலைவரின் அறிவிப்பு..!!!




சுப்புவின் சடலத்திற்கு ...

கட்சி தலைமையிடத்திலிருந்து...


ஆயிரம் மாலைகள்..!!!

அரசு மரியாதையுடன்...,

அடக்கம் செய்யப்பட்டது சடலம்..!!!


தத்தெடுத்த சுப்புவின் வீட்டிற்கு...

தலைவர்களின் அணிவகுப்பு..!!!


குடும்ப நலம் விசாரிக்க..!!!

குடும்பத்தின் தேவையினை அறிய...!!!


பிரம்மாண்டமாய்...!!! பத்திரிகைகளில் 

பாராட்டுக்கள்..!! இச்செய்தி குறித்து.


ஒரு மாதத்திற்குப் பின்,

ஒரு கோரிக்கை வைத்து ...!!!


உதவி கேட்டாள்  சுப்புவின் மனைவி .

உடனே நாளை வா...!! 

நல்லது சொல்கிறேன் என,

நவின்றார்...!!!கட்சியின் எம்எல்ஏ.


மறுநாள் சென்றாள்..!!

மாறுபட்டு பேசினார்..!!

 

இருப்புக் கொள்ளவில்லை.

இவளுக்கு...!!!


தனது கோரிக்கை குறித்து  ,

தாளாமல் அவசரப்பட்டாள்..!!


ஏன் அவசரப் படுற...???

கொஞ்சம் இரு ....!! என்று..

எட்டி கையைப் பிடித்தான்..!!

ஒரு நமட்டு சிரிப்புடன்..!!


சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!

சட்டென்று நினைவில் வந்தது..!!!


சுட்டாள் கண்களால்..!! 

சூடு தாங்காமல்....


மறுவாரம் மாலை..!!

மகிழ்வோடு  வரச்சொன்னான்..!!


கனத்த மனத்தோடு நடந்தாள்.

கணவரின் மரணமும்..!!!

கணவரின் சடலத்துக்கு கிடைத்த ...


மாலை மரியாதைகளும்..!!!

மனக்கண்முன் வந்து...

மனசு  கனத்தது..!!


ஆறாத மனதுடன்....

ஆற்றங் கரையில் ,

அமர்ந்திருக்கும்....


கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....

கால்கள் நடந்தன..!!


கல்லுப் பிள்ளையாரிடம் ,

கவலைகள் அனைத்தையும் கொட்டி ...

தன் மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,


தன்னம்பிக்கையுடன் ,

தைரியமாய் நடந்தாள் ..!!

தன் கோரிக்கையை வென்றெடுக்க..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்