- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
போராளி சுப்புவின்,
திடீர் மரண செய்தி...!!!
காட்டுத்தீயாய்...!!!
கந்துப்பட்டி முழுவதும்...
காற்றாக பரவியது.
அனுதாப அலைகள் எங்கும்...!!!
ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...!!!
சுப்புவின் இளம் மனைவிக்கு ...
கட்சித் தலைவர்களின் ஆறுதல்..!!!
சுப்புவின் குடும்பத்தை,
தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!
தலைவரின் அறிவிப்பு..!!!
சுப்புவின் சடலத்திற்கு ...
கட்சி தலைமையிடத்திலிருந்து...
ஆயிரம் மாலைகள்..!!!
அரசு மரியாதையுடன்...,
அடக்கம் செய்யப்பட்டது சடலம்..!!!
தத்தெடுத்த சுப்புவின் வீட்டிற்கு...
தலைவர்களின் அணிவகுப்பு..!!!
குடும்ப நலம் விசாரிக்க..!!!
குடும்பத்தின் தேவையினை அறிய...!!!
பிரம்மாண்டமாய்...!!! பத்திரிகைகளில்
பாராட்டுக்கள்..!! இச்செய்தி குறித்து.
ஒரு மாதத்திற்குப் பின்,
ஒரு கோரிக்கை வைத்து ...!!!
உதவி கேட்டாள் சுப்புவின் மனைவி .
உடனே நாளை வா...!!
நல்லது சொல்கிறேன் என,
நவின்றார்...!!!கட்சியின் எம்எல்ஏ.
மறுநாள் சென்றாள்..!!
மாறுபட்டு பேசினார்..!!
இருப்புக் கொள்ளவில்லை.
இவளுக்கு...!!!
தனது கோரிக்கை குறித்து ,
தாளாமல் அவசரப்பட்டாள்..!!
ஏன் அவசரப் படுற...???
கொஞ்சம் இரு ....!! என்று..
எட்டி கையைப் பிடித்தான்..!!
ஒரு நமட்டு சிரிப்புடன்..!!
சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!
சட்டென்று நினைவில் வந்தது..!!!
சுட்டாள் கண்களால்..!!
சூடு தாங்காமல்....
மறுவாரம் மாலை..!!
மகிழ்வோடு வரச்சொன்னான்..!!
கனத்த மனத்தோடு நடந்தாள்.
கணவரின் மரணமும்..!!!
கணவரின் சடலத்துக்கு கிடைத்த ...
மாலை மரியாதைகளும்..!!!
மனக்கண்முன் வந்து...
மனசு கனத்தது..!!
ஆறாத மனதுடன்....
ஆற்றங் கரையில் ,
அமர்ந்திருக்கும்....
கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....
கால்கள் நடந்தன..!!
கல்லுப் பிள்ளையாரிடம் ,
கவலைகள் அனைத்தையும் கொட்டி ...
தன் மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,
தன்னம்பிக்கையுடன் ,
தைரியமாய் நடந்தாள் ..!!
தன் கோரிக்கையை வென்றெடுக்க..!!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}