சென்னை: மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமலஹாசன்.
தமிழக மாநிலங்களவை எம்பிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள அப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட நான்கு நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்பட்டது. அதேபோல் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக வை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனைக் மேற்கொண்டு வருகிறது. இதில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மநீம தலைவர் கமலஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனை வரவேற்ற முதல்வர் கமலஹாசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வரை சந்திப்பிற்குப் பிறகு கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் அழைத்ததின் பேரில் ராஜ்ய சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி இடம் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினேன். அந்த அவையில் பேச என் குரல் தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன். ஆனால் தமிழ்நாட்டுக்காக எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}