சென்னை: மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமலஹாசன்.
தமிழக மாநிலங்களவை எம்பிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள அப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட நான்கு நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்பட்டது. அதேபோல் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக வை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனைக் மேற்கொண்டு வருகிறது. இதில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மநீம தலைவர் கமலஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனை வரவேற்ற முதல்வர் கமலஹாசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வரை சந்திப்பிற்குப் பிறகு கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் அழைத்ததின் பேரில் ராஜ்ய சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி இடம் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினேன். அந்த அவையில் பேச என் குரல் தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன். ஆனால் தமிழ்நாட்டுக்காக எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}