சென்னை: மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமலஹாசன்.
தமிழக மாநிலங்களவை எம்பிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள அப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட நான்கு நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்பட்டது. அதேபோல் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக வை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனைக் மேற்கொண்டு வருகிறது. இதில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மநீம தலைவர் கமலஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனை வரவேற்ற முதல்வர் கமலஹாசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வரை சந்திப்பிற்குப் பிறகு கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் அழைத்ததின் பேரில் ராஜ்ய சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி இடம் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினேன். அந்த அவையில் பேச என் குரல் தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன். ஆனால் தமிழ்நாட்டுக்காக எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}