டெல்லி: ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு இந்தியனாக இதை கெளரவமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காலியான 6 ராஜ்யசபா எம்.பி பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் கமல்ஹாசன், பி. வில்சன், ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் திமுக கூட்டணி சார்பிலும், அதிமுக சார்பில் இன்பதுரை, எம். தனபால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது, எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. டெல்லியில் விரிவாகப் பேசுகிறேன். ஒரு இந்தியனாக இதைக் கெளரவமாக பார்க்கிறேன் என்று கூறினார் கமல்ஹாசன்.

அரசியல் தலைவராகவும், சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். சமீபத்தில்தான் அவரது தக்லைப் படம் வெளியானது. தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், ஓடிடியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்3 படம் வெளியாகவுள்ளது.
தான் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது நண்பரான நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன் என்பது நினைவிருக்கலாம்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}