தக்லைப் படம் சிக்கலின்றி ரிலீஸாகவும்.. தேவையான பாதுகாப்பு தரவும் உத்தரவிடுக.. கமல்ஹாசன் வழக்கு

Jun 02, 2025,06:29 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசன், தனது 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதை உறுதி செய்யவும், உரிய பாதுகாப்புயும் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 


கமல்ஹாசன் கன்னடம், தமிழில் இருந்து உருவானது என்று கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்ததையடுத்து இந்த சட்ட நடவடிக்கையில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார்.


ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதை எதிர்த்தே தற்போது கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார்.




கமல்ஹாசன் தலைமையிலான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில்,  கன்னடம் மற்றும் தமிழ் மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவோ அல்லது தடுக்கவோ கூடாது என்றும், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு "அச்சுறுத்தல்கள் அல்லது இடையூறுகள்" இல்லாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரியுள்ளார்.


கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடனான உரையாடலின்போது கமல்ஹாசன் கூறிய கருத்துக்கள், ஒரு பெரிய செய்தியின் ஒரு பகுதியாகும் என்றும், சிவராஜ்குமார் கமல்ஹாசனின் நோக்கங்களை ஆதரித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எதிர்ப்பு தேவையற்றது மட்டுமல்லாமல், நடிகரின் வார்த்தைகளை வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது. கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதன் உற்பத்தி செலவு சுமார் 300 கோடி ரூபாய் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.


மணிரத்னம் இயக்கியுள்ள தக்லைப் திரைப்படம், கமல்ஹாசனுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் ஆகும். இதில் திரிஷா கிருஷ்ணன் மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகா மோசமாக இருக்கும் மதுரை.. மறு சீரமைப்பு நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை

news

ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்

news

42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி

news

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கொடூரனை கைது செய்யாதது தான் அரசின் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!

news

பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு !

news

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு காயம்.. ஒரு மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

news

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

news

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை!

news

கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்