தக்லைப் படம் சிக்கலின்றி ரிலீஸாகவும்.. தேவையான பாதுகாப்பு தரவும் உத்தரவிடுக.. கமல்ஹாசன் வழக்கு

Jun 02, 2025,06:29 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசன், தனது 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதை உறுதி செய்யவும், உரிய பாதுகாப்புயும் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 


கமல்ஹாசன் கன்னடம், தமிழில் இருந்து உருவானது என்று கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்ததையடுத்து இந்த சட்ட நடவடிக்கையில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார்.


ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதை எதிர்த்தே தற்போது கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார்.




கமல்ஹாசன் தலைமையிலான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில்,  கன்னடம் மற்றும் தமிழ் மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவோ அல்லது தடுக்கவோ கூடாது என்றும், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு "அச்சுறுத்தல்கள் அல்லது இடையூறுகள்" இல்லாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரியுள்ளார்.


கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடனான உரையாடலின்போது கமல்ஹாசன் கூறிய கருத்துக்கள், ஒரு பெரிய செய்தியின் ஒரு பகுதியாகும் என்றும், சிவராஜ்குமார் கமல்ஹாசனின் நோக்கங்களை ஆதரித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எதிர்ப்பு தேவையற்றது மட்டுமல்லாமல், நடிகரின் வார்த்தைகளை வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது. கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதன் உற்பத்தி செலவு சுமார் 300 கோடி ரூபாய் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.


மணிரத்னம் இயக்கியுள்ள தக்லைப் திரைப்படம், கமல்ஹாசனுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் ஆகும். இதில் திரிஷா கிருஷ்ணன் மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்