தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

Aug 05, 2025,11:16 AM IST

சென்னை: அகரம் பவுண்டேஷனின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அட்டகாசமாக பேசியதைத் தொடர்ந்து தற்போது நடிகரும், அகரம் பவுண்டேஷனின் நிறுவனருமான சூர்யாவுக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றையும் நெகிழ்ச்சியுடன் அனுப்பியுள்ளார்.


நடிகர் சூர்யா தொடங்கிய அகரம் பவுண்டேஷன் 15வது ஆண்டைத் தொட்டுள்ளது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மிகவும் நெகிழ்ச்சியாகவும், உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசினார். 


நீட் ஏன் நமக்கு வேண்டாம் என்பதை அகரத்தின் செயல்பாடுகள் நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டுப் பேசினார். கமல்ஹாசனின் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சூர்யாவையும், சிவக்குமார் குடும்பத்தை வாழ்த்தியும் கடிதம் அனுப்பியுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:


அன்புள்ள சூர்யா,




நீங்கள், ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா, மற்றும் தாயார் லட்சுமி அண்ணி அனைவரும் எனது குடும்பத்தின் ஓர் அங்கம். அகரம் அறக்கட்டளையின் 15-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் அளித்தது. அகரம் மூலம் உருவான மருத்துவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் தனிப்பட்ட சாதனைகள் மட்டுமல்ல; இரக்கம் மற்றும் பொதுச் சேவை உணர்வால் வளர்க்கப்படும்போது கல்வி எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதற்கு அவர்கள் வாழும் உதாரணங்கள்.


நீங்களும் அகரம் குழுவினரும் ஒரு அமைதியான புரட்சியைத் தொடங்கி இருக்கிறீர்கள். ஒவ்வொரு குழந்தையையும், ஒவ்வொரு கனவையும் கவனத்துடன் வளர்த்து வருகிறீர்கள். உங்கள் அறக்கட்டளையின் பணி, எண்ணிக்கையால் அளவிடப்படாது. அது ஏற்படுத்தியிருக்கும் நீடித்த மாற்றங்களால் அறியப்படும். அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு குழந்தையும், சமூகங்களை குணப்படுத்தவும், வழிநடத்தவும், எண்ணற்றோரை உயர்த்தவும் ஆற்றல் பெற்றவர்கள். இதன் மூலம் வரும் தலைமுறைகளுக்கும் மாற்றத்தின் அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.


உங்களின் முயற்சிகள், நீதியான மற்றும் முற்போக்கான இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. உறுதியான கைகளில் வழங்கப்படும் கல்வி ஒளி, பிறப்பு மற்றும் சூழ்நிலைகளால் உருவான தடைகளை எப்படி நீக்குகிறது என்பதை இது காட்டுகிறது. வெறும் பிழைப்பைக் கடந்து கனவு காணவும், கண்ணியம், நோக்கம், சிறப்பியல்பு ஆகியவற்றை அடையவும் பலருக்கு நீங்கள் தைரியத்தை அளித்திருக்கிறீர்கள்.


காரணத்திலும் நம்பிக்கையிலும் உங்களின் உறவினன் என்ற முறையிலும், மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும், நாம் இருவரும் நேசிக்கும் இந்த குடியரசின் சக குடிமகன் என்ற முறையிலும், இந்த உன்னதமான முயற்சிக்கு எப்போதும் உங்கள் சேவையில் இருப்பேன். நமது அன்பான தமிழ் மாநிலம் உங்கள் குடும்பத்தின் மீது பொழிந்த அன்பை நீங்கள் சிறப்பாக திருப்பி அளித்துள்ளீர்கள்.


காலப்போக்கில், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளிரும்போது, நீங்கள் உயர்த்தியவர்களின் அமைதியான வெற்றிகளிலும், நீங்கள் ஏற்றிய ஒளியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தலைமுறைகளிலும் அது இன்னும் நீடித்த ஒளியுடன் பிரகாசிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


பாராட்டுக்களுடனும் பாசத்துடனும், கமல் ஹாசன் என்று அந்தக் கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்