டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டைச் சமாளிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு (Cloud seeding) சோதனைகள், அதாவது செயற்கை மழை முயற்சியானது, மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) குழுவினர் நேற்று இரண்டு கட்ட சோதனைகளை மேற்கொண்டனர், ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் இந்த முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை.
டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவிலேயே இருந்து வருகிறது. இதை சரி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த செயற்கை மழை முயற்சி. இதுகுறித்து கான்பூர் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ள தகவலில், இன்று (அக்டோபர் 29, 2025) திட்டமிடப்பட்ட மேக விதைப்பு செயல்பாடு மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளை முற்றிலும் சார்ந்துள்ளது.

ஈரப்பதத்தின் அளவு சுமார் 15 முதல் 20 சதவிகிதம் மட்டுமே இருந்ததால், நேற்று மழையை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், இந்தச் சோதனை மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. டெல்லி முழுவதும் அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையங்கள், துகள்கள் மற்றும் ஈரப்பதம் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை நிகழ்நேரத்தில் பதிவு செய்தன. இந்தத் தரவுகளின்படி, PM2.5 மற்றும் PM10 செறிவுகளில் 6 முதல் 10 சதவிகிதம் வரை குறிப்பிடத்தக்க குறைப்பு காணப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், மேலும் ஏழு மேக விதைப்பு சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "நேற்று இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் குறைந்த ஈரப்பதம் காரணமாக மழை பெய்யவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
{{comments.comment}}