- வே.ஜெயந்தி
தன்னைத் தானே
தூக்கிப் பேசான் தமிழன்,
தாழ்மை தாங்கி
தலைநிமிர்வான் தமிழன்.
இனிய மொழி பேசி
இரக்கம் விதைப்பான்,
இனிமை நெஞ்சில்
இயல்பு பதிப்பான்.
பண்பால் பெருமை,
பாசத்தால் புகழ்,
போராடும் வேளையில்
புயலாய் எழும் விழி நெருப்பு!
செம்மை சிந்தை,
சேர்ந்த மனம்,
செல்வம் அல்ல
பண்பே செல்வம்!
அம்மா மொழியை
அமுதெனக் காக்கும்,
அருமை மரபை
ஆன்மாவில் தாங்கும்.
உலகம் எங்கும்
உழைப்பால் உயர்ந்தாலும்,
உறுதி முழக்கமாய்
“உயிரே தமிழ்!” என ஒலிக்கும் தமிழன்!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!
47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!
திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?
தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு!
சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!
செந்தமிழ் தேன்மொழியாள்!
சிகைக் கொற்றன் வரகண்ட' என்று.. எகிப்தியர்களையும்.. ஈர்த்தமொழி!
யார் தமிழன்?
தாய்மொழியைக் கொண்டாடுவோம்.. வங்கத்திலிருந்து கிளம்பிய மொழிப் பொறி!
{{comments.comment}}