- வே.ஜெயந்தி
தன்னைத் தானே
தூக்கிப் பேசான் தமிழன்,
தாழ்மை தாங்கி
தலைநிமிர்வான் தமிழன்.
இனிய மொழி பேசி
இரக்கம் விதைப்பான்,
இனிமை நெஞ்சில்
இயல்பு பதிப்பான்.
பண்பால் பெருமை,
பாசத்தால் புகழ்,
போராடும் வேளையில்
புயலாய் எழும் விழி நெருப்பு!
செம்மை சிந்தை,
சேர்ந்த மனம்,
செல்வம் அல்ல
பண்பே செல்வம்!
அம்மா மொழியை
அமுதெனக் காக்கும்,
அருமை மரபை
ஆன்மாவில் தாங்கும்.
உலகம் எங்கும்
உழைப்பால் உயர்ந்தாலும்,
உறுதி முழக்கமாய்
“உயிரே தமிழ்!” என ஒலிக்கும் தமிழன்!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
Tamil Short Story: ராசிக்கல்!
எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!
Poem: ஆத்தோரம் பூத்த கன்னி
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
{{comments.comment}}