- வே.ஜெயந்தி
தன்னைத் தானே
தூக்கிப் பேசான் தமிழன்,
தாழ்மை தாங்கி
தலைநிமிர்வான் தமிழன்.
இனிய மொழி பேசி
இரக்கம் விதைப்பான்,
இனிமை நெஞ்சில்
இயல்பு பதிப்பான்.
பண்பால் பெருமை,
பாசத்தால் புகழ்,
போராடும் வேளையில்
புயலாய் எழும் விழி நெருப்பு!
செம்மை சிந்தை,
சேர்ந்த மனம்,
செல்வம் அல்ல
பண்பே செல்வம்!
அம்மா மொழியை
அமுதெனக் காக்கும்,
அருமை மரபை
ஆன்மாவில் தாங்கும்.
உலகம் எங்கும்
உழைப்பால் உயர்ந்தாலும்,
உறுதி முழக்கமாய்
“உயிரே தமிழ்!” என ஒலிக்கும் தமிழன்!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்
Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!
Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்
Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!
நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு
IPL 2026.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : டெல்லி கேபிடல்ஸ்.. குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்
Motivational Story: இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்
{{comments.comment}}