விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கர்நாடகத்தில் செம மழை.. கே.ஆர்.எஸ் அணைக்கு கிடுகிடு நீர்வரத்து!

Jun 27, 2024,10:21 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 


கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள குடகு, உத்தர்கன்னடா மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை  கொட்டி வருகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெங்களூர் குடகு தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடகு  மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் இன்று அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று  பெய்த மிக கனமழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.




இந்த இரண்டு அணைகளும் நிரம்பினால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.


கேரளாவிலும் செம மழை 


கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது  இந்த பருவமழை மேலும் தீவிரமடைந்தது வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தலைநகர் டெல்லியிலும் கூட பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையிலிருந்து டெல்லியில் நல்ல மழை பெய்து வருகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையம்: 


தமிழ்நாடு,  புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

அதேபோல கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்