- ஸ்வர்ணலட்சுமி
கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வீடு முழுவதும் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மற்றொரு ஸ்பெஷலும் உண்டு. அது கார்த்திகை அன்று சிவ பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கும் கார்த்திகை பொரி தான்.
தீபங்கள் ஏற்றி வைத்து, நைவேத்தியமாக நெல் பொரி, பொரி உருண்டை ஆகியவற்றை சிவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றம் உள்ளது.

சிவ பெருமான் நெருப்பு வடிவமாக காட்சி தந்தவர். அவருடைய நெற்றிக் கண்ணில் இருந்து உருவான நெருப்பு பொரியில் இருந்து தோன்றி, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் தான் முருகப் பெருமான். பொரி என்றால் வித்து என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது தோற்றத்தின் ஆரம்ப கர்த்தா. அப்படி உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆரம்ப கர்த்தாவாக, வித்தாக விளங்குபவர் சிவ பெருமான் என்பதை உணர்த்துவதற்காகவே அன்றை தினம் பொரியை அவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறோம்.
நம் வீடுகளில் தீபங்கள் ஏற்றும் போது அதில் இருக்கும் அக்னியில் சிவன், முருகன், பார்வதி தேவி, கார்த்திகை பெண்கள் ஆகியோர் எழுந்தருள் செய்வதாக ஐதீகம்.
அவர்களின் அருளை பெற பொரி நைவேத்தியமாக படைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவை அனைத்தையும் வைத்து தீப, தூப ஆராதனை காட்டி வழிபட, எல்லாம் வல்ல பரம்பொருளான சிவ பெருமான் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!
விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!
{{comments.comment}}