கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

Dec 12, 2024,06:09 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வீடு முழுவதும் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மற்றொரு ஸ்பெஷலும் உண்டு. அது கார்த்திகை அன்று சிவ பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கும் கார்த்திகை பொரி தான்.


தீபங்கள் ஏற்றி வைத்து, நைவேத்தியமாக நெல் பொரி, பொரி உருண்டை ஆகியவற்றை சிவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றம் உள்ளது.




சிவ பெருமான் நெருப்பு வடிவமாக காட்சி தந்தவர். அவருடைய நெற்றிக் கண்ணில் இருந்து உருவான நெருப்பு பொரியில் இருந்து தோன்றி, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் தான் முருகப் பெருமான். பொரி என்றால் வித்து என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது தோற்றத்தின் ஆரம்ப கர்த்தா. அப்படி உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆரம்ப கர்த்தாவாக, வித்தாக விளங்குபவர் சிவ பெருமான் என்பதை உணர்த்துவதற்காகவே அன்றை தினம் பொரியை அவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறோம்.


நம் வீடுகளில் தீபங்கள் ஏற்றும் போது அதில் இருக்கும் அக்னியில் சிவன், முருகன், பார்வதி தேவி, கார்த்திகை பெண்கள் ஆகியோர் எழுந்தருள் செய்வதாக ஐதீகம்.


அவர்களின் அருளை பெற பொரி நைவேத்தியமாக படைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவை அனைத்தையும் வைத்து தீப, தூப ஆராதனை காட்டி வழிபட, எல்லாம் வல்ல பரம்பொருளான சிவ பெருமான் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்