சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

Aug 01, 2025,07:30 PM IST

நெல்லை: 5 நாட்களுக்கு பின்னர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட இளைஞர் கவினின் உடல். நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள்.


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தால் கவின் கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுட்டனர்.




இந்த வழக்கில் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தந்தை அவரது தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் உறவினர்கள் கூறி வந்தனர். இதற்கிடையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின்னர் கவினின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து கவினின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இது தீராத தாகம்!

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை

news

உயிரெழுத்தில் உறவோசை!

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்