- கவிதா அறிவழகன்
இந்த இரைச்சலான பிரபஞ்சத்தில்,
பலர் வருவார்கள்;
பலர் மின்னல் கீற்றாய் மறைந்தும் போவார்கள் ---
சூரிய ஒளியில் ஜொலிக்கும் வண்ணங்கள்
காலப்போக்கில் மங்குவது போல.
ஆனால், விதியால் இணைக்கப்பட்ட
அந்த ஒரு துடிப்பான ஆத்மா,
கடும் பனிப்புயலிலும்
நம்மோடு பயணிக்கும்.

நம் கரங்களை விடாமல் பற்றிக்கொண்டு,
அந்தக் கடும் குளிரிலும்,
பாதை மாறினாலும்
நம்மை விட்டு விலகாமல்,
நம்மோடு சேர்ந்து நடப்பார்கள்.
மாறிவரும் பருவநிலையைப் போல,
மனம் மாறும் மனிதர்களிடையே,
நம் உணர்வுகளைப் புரிந்து,
எந்தப் பாரபட்சமுமின்றி
நம்மை அரவணைப்பார்கள்.
அவர்களே நமக்காக நிலைத்து நிற்பவர்கள்;
நம்முடன் பயணிப்பவர்கள்.
அந்த நல்ல ஆத்மாவை அளித்த
ஆண்டவனுக்கு நன்றி.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
இதயத்துடிப்பும் மனநிறைவும்
அந்திக் கருக்கலில் ஒரு காவியம்
நிலைத்து நிற்கும் ஆத்மாக்கள்!
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ் சாறன் நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
Thanks to the Humanity: நன்றி சொல்வோமா!
{{comments.comment}}