நிலைத்து நிற்கும் ஆத்மாக்கள்!

Apr 29, 2026,04:40 PM IST

- கவிதா அறிவழகன்


இந்த இரைச்சலான பிரபஞ்சத்தில்,

பலர் வருவார்கள்;

பலர் மின்னல் கீற்றாய் மறைந்தும் போவார்கள் ---

சூரிய ஒளியில் ஜொலிக்கும் வண்ணங்கள்

காலப்போக்கில் மங்குவது போல.


ஆனால், விதியால் இணைக்கப்பட்ட

அந்த ஒரு துடிப்பான ஆத்மா,

கடும் பனிப்புயலிலும்

நம்மோடு பயணிக்கும்.




நம் கரங்களை விடாமல் பற்றிக்கொண்டு,

அந்தக் கடும் குளிரிலும்,

பாதை மாறினாலும்

நம்மை விட்டு விலகாமல்,

நம்மோடு சேர்ந்து நடப்பார்கள்.


மாறிவரும் பருவநிலையைப் போல,

மனம் மாறும் மனிதர்களிடையே,

நம் உணர்வுகளைப் புரிந்து,

எந்தப் பாரபட்சமுமின்றி

நம்மை அரவணைப்பார்கள்.


அவர்களே நமக்காக நிலைத்து நிற்பவர்கள்;

நம் இறுதி மூச்சுவரை

நம்முடன் பயணிப்பவர்கள்.


அந்த நல்ல ஆத்மாவை அளித்த

ஆண்டவனுக்கு நன்றி.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்