- கவிதா அறிவழகன்
இந்த இரைச்சலான பிரபஞ்சத்தில்,
பலர் வருவார்கள்;
பலர் மின்னல் கீற்றாய் மறைந்தும் போவார்கள் ---
சூரிய ஒளியில் ஜொலிக்கும் வண்ணங்கள்
காலப்போக்கில் மங்குவது போல.
ஆனால், விதியால் இணைக்கப்பட்ட
அந்த ஒரு துடிப்பான ஆத்மா,
கடும் பனிப்புயலிலும்
நம்மோடு பயணிக்கும்.

நம் கரங்களை விடாமல் பற்றிக்கொண்டு,
அந்தக் கடும் குளிரிலும்,
பாதை மாறினாலும்
நம்மை விட்டு விலகாமல்,
நம்மோடு சேர்ந்து நடப்பார்கள்.
மாறிவரும் பருவநிலையைப் போல,
மனம் மாறும் மனிதர்களிடையே,
நம் உணர்வுகளைப் புரிந்து,
எந்தப் பாரபட்சமுமின்றி
நம்மை அரவணைப்பார்கள்.
அவர்களே நமக்காக நிலைத்து நிற்பவர்கள்;
நம்முடன் பயணிப்பவர்கள்.
அந்த நல்ல ஆத்மாவை அளித்த
ஆண்டவனுக்கு நன்றி.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}