- கவிதா அறிவழகன்
இந்த இரைச்சலான பிரபஞ்சத்தில்,
பலர் வருவார்கள்;
பலர் மின்னல் கீற்றாய் மறைந்தும் போவார்கள் ---
சூரிய ஒளியில் ஜொலிக்கும் வண்ணங்கள்
காலப்போக்கில் மங்குவது போல.
ஆனால், விதியால் இணைக்கப்பட்ட
அந்த ஒரு துடிப்பான ஆத்மா,
கடும் பனிப்புயலிலும்
நம்மோடு பயணிக்கும்.

நம் கரங்களை விடாமல் பற்றிக்கொண்டு,
அந்தக் கடும் குளிரிலும்,
பாதை மாறினாலும்
நம்மை விட்டு விலகாமல்,
நம்மோடு சேர்ந்து நடப்பார்கள்.
மாறிவரும் பருவநிலையைப் போல,
மனம் மாறும் மனிதர்களிடையே,
நம் உணர்வுகளைப் புரிந்து,
எந்தப் பாரபட்சமுமின்றி
நம்மை அரவணைப்பார்கள்.
அவர்களே நமக்காக நிலைத்து நிற்பவர்கள்;
நம்முடன் பயணிப்பவர்கள்.
அந்த நல்ல ஆத்மாவை அளித்த
ஆண்டவனுக்கு நன்றி.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}