காவியக் காதல்!

Feb 07, 2026,01:25 PM IST

-கவிஞர் க.முருகேஸ்வரி


அறியா வயதில் 

புரியா மனதில் 

புதிதாய்‌ வந்த என் உறவே..


உறவாய் நினைத்தே

உளத்தால் ரசித்தேன் 

காதலாய் மாறக்

காரணம் எதுவே....


பார்க்கும் போதே

பரவசம் கண்டேன்




பார்வையாலே 

உன் காதலை உண்டேன் 


நம்பினேன் அதனால் 

தினம் வெம்பினேன்....


விவரம் புரியா வயசில்

விளங்கவும் இல்லை 

விளக்கவும் இல்லை....


காதலும் இல்லை 

மோதலும் இல்லை


காலத்தின் போக்கில் 

கரைந்துருகிப் போனதே...


உன்னுடனான எந்தன் காதல் 

வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....


காதல் தந்த வலியை விட

கனவு‌ தந்தது அதிகமே...


கவலைப்பட ஒன்றுமில்லை ...

கைகூடாவிட்டாலும்

இது நம் காவியக் காதலே!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்

news

ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!

news

கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

news

புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு

news

திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்

news

ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்

news

நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

news

வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!

news

Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

அதிகம் பார்க்கும் செய்திகள்