-கவிஞர் க.முருகேஸ்வரி
அறியா வயதில்
புரியா மனதில்
புதிதாய் வந்த என் உறவே..
உறவாய் நினைத்தே
உளத்தால் ரசித்தேன்
காதலாய் மாறக்
காரணம் எதுவே....
பார்க்கும் போதே
பரவசம் கண்டேன்

பார்வையாலே
உன் காதலை உண்டேன்
நம்பினேன் அதனால்
தினம் வெம்பினேன்....
விவரம் புரியா வயசில்
விளங்கவும் இல்லை
விளக்கவும் இல்லை....
காதலும் இல்லை
மோதலும் இல்லை
காலத்தின் போக்கில்
கரைந்துருகிப் போனதே...
உன்னுடனான எந்தன் காதல்
வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....
கவலைப்பட ஒன்றுமில்லை ...
கைகூடாவிட்டாலும்
இது நம் காவியக் காதலே!!!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்
ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
{{comments.comment}}