-கவிஞர் க.முருகேஸ்வரி
அறியா வயதில்
புரியா மனதில்
புதிதாய் வந்த என் உறவே..
உறவாய் நினைத்தே
உளத்தால் ரசித்தேன்
காதலாய் மாறக்
காரணம் எதுவே....
பார்க்கும் போதே
பரவசம் கண்டேன்

பார்வையாலே
உன் காதலை உண்டேன்
நம்பினேன் அதனால்
தினம் வெம்பினேன்....
விவரம் புரியா வயசில்
விளங்கவும் இல்லை
விளக்கவும் இல்லை....
காதலும் இல்லை
மோதலும் இல்லை
காலத்தின் போக்கில்
கரைந்துருகிப் போனதே...
உன்னுடனான எந்தன் காதல்
வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....
கவலைப்பட ஒன்றுமில்லை ...
கைகூடாவிட்டாலும்
இது நம் காவியக் காதலே!!!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}