காவியக் காதல்!

Feb 07, 2026,01:25 PM IST

-கவிஞர் க.முருகேஸ்வரி


அறியா வயதில் 

புரியா மனதில் 

புதிதாய்‌ வந்த என் உறவே..


உறவாய் நினைத்தே

உளத்தால் ரசித்தேன் 

காதலாய் மாறக்

காரணம் எதுவே....


பார்க்கும் போதே

பரவசம் கண்டேன்




பார்வையாலே 

உன் காதலை உண்டேன் 


நம்பினேன் அதனால் 

தினம் வெம்பினேன்....


விவரம் புரியா வயசில்

விளங்கவும் இல்லை 

விளக்கவும் இல்லை....


காதலும் இல்லை 

மோதலும் இல்லை


காலத்தின் போக்கில் 

கரைந்துருகிப் போனதே...


உன்னுடனான எந்தன் காதல் 

வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....


காதல் தந்த வலியை விட

கனவு‌ தந்தது அதிகமே...


கவலைப்பட ஒன்றுமில்லை ...

கைகூடாவிட்டாலும்

இது நம் காவியக் காதலே!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு

news

சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி

news

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

news

மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!

news

RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா

news

வரமும்.. வரம்பும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்