-கவிஞர் க.முருகேஸ்வரி
அறியா வயதில்
புரியா மனதில்
புதிதாய் வந்த என் உறவே..
உறவாய் நினைத்தே
உளத்தால் ரசித்தேன்
காதலாய் மாறக்
காரணம் எதுவே....
பார்க்கும் போதே
பரவசம் கண்டேன்

பார்வையாலே
உன் காதலை உண்டேன்
நம்பினேன் அதனால்
தினம் வெம்பினேன்....
விவரம் புரியா வயசில்
விளங்கவும் இல்லை
விளக்கவும் இல்லை....
காதலும் இல்லை
மோதலும் இல்லை
காலத்தின் போக்கில்
கரைந்துருகிப் போனதே...
உன்னுடனான எந்தன் காதல்
வெறும் கனவாய் மட்டும் என ஆனதே....
கவலைப்பட ஒன்றுமில்லை ...
கைகூடாவிட்டாலும்
இது நம் காவியக் காதலே!!!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
பாந்தமாய் ஒளிரும் கயல் விழிகள்.. சிறு கீற்று போல புருவ ஜாலம்!
மெல்லிய முல்லை மலர் சூடிய அமர் நீதி நாயனார் .. 63 நாயன்மார்கள் வரலாறு!
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
உலகமே ஒரு நாடக மேடை.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா மக்களே!
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
நினைவுகளை (நினைக்கும்) நனைக்கும் ஒரு நாள்!
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
நீரும் வாழ்வும்
{{comments.comment}}