திருவனந்தபுரம்: கேரளாவில் இனி யாரும் மிக ஏழ்மையில் இருக்க மாட்டார்கள். நவம்பர் 1 ஆம் தேதி, கேரளாவின் பிறந்த நாளன்று, முதலமைச்சர் பினராயி விஜயன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், பிரபல திரைப்பட நடிகர்களான கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். மாநில அமைச்சர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். எதிர்க்கட்சித் தலைவரும் அழைக்கப்படுகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.பி. ராஜேஷ் மற்றும் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி ஆகியோர் கூறுகையில், கேரளா மீண்டும் வரலாற்றை படைக்கிறது, மிக ஏழ்மையை ஒழிப்பதன் மூலம். இந்த இலக்கை அடைந்த முதல் மாநிலம் மட்டுமல்ல, உலகிலேயே இரண்டாவது பிராந்தியம் என்ற பெருமையையும் கேரளா பெற்றுள்ளது என்றார்.
இந்த மைல்கல்லைக் கொண்டாட, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சரி அது என்ன மிக ஏழ்மை?
மிக ஏழ்மை என்பது, ஒரு தனிநபர் அல்லது குடும்பம் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையைக் குறிக்கிறது.
உலக வங்கி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2.15 டாலருக்கும் (சுமார் 180 ரூபாய்) குறைவாக சம்பாதிப்பவர்களை மிக ஏழ்மையில் உள்ளவர்களாக வரையறுக்கிறது. இந்தியாவில், ஊட்டச்சத்து, வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் போன்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய அளவுகோல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதை NITI Aayog-ன் Multidimensional Poverty Index (MPI) போன்ற கருவிகள் மூலம் அளவிடுகிறார்கள்.
கேரளாவின் இந்த அறிவிப்பு, கேரளாவின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் ஒரு உத்வேகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}