பெங்களூரு: உங்களது பணத்தை 21 நாளில் இரட்டிப்பாக்கித் தருகிறோம் என்று கூறி பலரிடமும் பல கோடி வரை பணத்தை மோசடி செய்த ஒரு கேரள தம்பதி தற்போது தலைமறைவாகி விட்டது.
எளிய முறையில் பணக்காரராக வேண்டும் என்பதே தற்போது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இப்படி ஆசைப்படுவோரில் 99 சதவீதம் பேர் இப்படிப்பட்ட எளிய முறைகளைப் பின்பற்றி மோசடிக்குள்ளானதுதான் மிச்சம். காரணம், இப்படிப்பட்ட அப்பாவிகளை ஏமாற்றுவதற்காகவே ஊருக்கு நாலு பிராடு கும்பல் காத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிக் கும்பலிடம் பணத்தை தொடர்ந்து பறி கொடுத்தபடி உள்ளனர் அப்பாவி மக்கள்.
கேரளாவைச் சேர்ந்த டோம் மற்றும் ஷைனி என்ற தம்பதியினர், மிக அதிக முதலீட்டு லாபத்தை ஈர்க்கும் விதமாக நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தம்பதியான டோம் மற்றும் ஷைனி, 'A&A சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ்' என்ற பெயரில் ஒரு சீட்டு நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் முதலீடுகளுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை மிக உயர்ந்த வருமானத்தை வழங்குவதாகக் கூறி வந்துள்ளனர்.
ஆரம்பத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தம்பதியினர் சீரான வருமானத்தை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், சமீபகாலமாக, பணம் வழங்குவது நின்றுவிட்டதாகவும், தம்பதியினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். கிட்டத்தட்ட 300 முதலீட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி நகர் காவல் நிலைய போலீஸார் இவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இருவரின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டு, அலுவலகம் மூடப்பட்டு, இந்தத் தம்பதியினர் தலைமறைவாக உள்ளனர்.
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
{{comments.comment}}