திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள அரசு. இந்த அறிவிப்பால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் ஏகோபித்த மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரின் சுருக்கம் தான் தி கோட். இப்படத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கபட்டுள்ளதால் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது மட்டும் இன்றி விஜய் விரைவில் நடிப்பை முடித்துக் கொண்டு, முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதால், விஜய் ரசிகர்கள் விஜய் படங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தி கோட் படத்தின் இறுதிக்காட்சிகள் கேரளாவில் தான் படமாக்கப்பட்டன. அப்போது கேரளா வந்த விஜய்க்கு கேளராவில் உள்ள விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட அளவில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் விஜய் வருகை குறித்து ஆரவாரம் செய்தனர். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கேளரா சென்ற போது ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருந்தனர். தமிழகத்தைப் போல கேளராவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், தி கோட் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு அதிகாலை நடைபெறும் சிறப்பு காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திகைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களும் கேரளாவிற்கு படையெடுக்க முடிவு செய்துள்ளதாக தீவிர விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}