கொச்சி: கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் ஆடிப் போயுள்ளது.
மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஹேமா கமிட்டி கடுமையான புகார்களை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கமான அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. அத்தனை பேரும் ராஜினாமா செய்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. நடிகைகள் சிலர் கூறிய புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
நடிகைகள் சோனியா மல்ஹார், மீனு முனீர், ரேவதி சம்பத் உள்ளிட்டோர் இதுவரை புகார் கூறியுள்ளனர். நடிகை சோனியா மல்ஹார், நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியுள்ளார். அதேபோல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார்.
கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா குறித்து நடிகை மீனு முனீர் கூறுகையில், ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. படத்தின் இடைவெளியில் நான் டாய்லெட் போயிருந்தேன். போய் விட்டு வெளியே வந்த என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்த நடிகர் ஜெயசூர்யா, முத்தமும் இட்டார். என்னுடைய அனுமதியின்றி இவ்வாறு அவர் செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல அம்மா சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து இடவேள பாபு தன்னிடம் உடல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் மீனு புகார் கூறியுள்ளார். இதேபோல நடிகர் முகேஷுடைய கோரிக்கைகளை தான் நிராகரித்ததால் தன்னை அம்மா சங்கத்தில் சேர விடாமல் தடுத்து வந்ததாக கூறியுள்ளார். முகேஷ் தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்டோரும் பல்வேறு புகார்களைக் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}