கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஹீரோ.. இதுவரை 17 வழக்குகள்.. ஸ்தம்பித்த மலையாளத் திரையுலகம்

Aug 28, 2024,06:47 PM IST

கொச்சி:   கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் ஆடிப் போயுள்ளது.


மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஹேமா கமிட்டி கடுமையான புகார்களை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கமான அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. அத்தனை பேரும் ராஜினாமா செய்து விட்டனர்.




இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. நடிகைகள் சிலர் கூறிய புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளன.


நடிகைகள் சோனியா மல்ஹார், மீனு முனீர், ரேவதி சம்பத் உள்ளிட்டோர் இதுவரை புகார் கூறியுள்ளனர். நடிகை சோனியா மல்ஹார், நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியுள்ளார். அதேபோல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார்.


கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஜெயசூர்யா


நடிகர் ஜெயசூர்யா குறித்து நடிகை மீனு முனீர் கூறுகையில், ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. படத்தின் இடைவெளியில் நான் டாய்லெட் போயிருந்தேன். போய் விட்டு வெளியே வந்த என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்த நடிகர் ஜெயசூர்யா, முத்தமும் இட்டார். என்னுடைய அனுமதியின்றி இவ்வாறு அவர் செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.


அதேபோல அம்மா சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து இடவேள பாபு தன்னிடம் உடல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் மீனு புகார் கூறியுள்ளார். இதேபோல நடிகர் முகேஷுடைய கோரிக்கைகளை தான் நிராகரித்ததால் தன்னை அம்மா சங்கத்தில் சேர விடாமல் தடுத்து வந்ததாக கூறியுள்ளார். முகேஷ் தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்கள் தவிர  பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்டோரும் பல்வேறு புகார்களைக் கூறியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்