கொச்சி: கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் ஆடிப் போயுள்ளது.
மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஹேமா கமிட்டி கடுமையான புகார்களை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கமான அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. அத்தனை பேரும் ராஜினாமா செய்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. நடிகைகள் சிலர் கூறிய புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
நடிகைகள் சோனியா மல்ஹார், மீனு முனீர், ரேவதி சம்பத் உள்ளிட்டோர் இதுவரை புகார் கூறியுள்ளனர். நடிகை சோனியா மல்ஹார், நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியுள்ளார். அதேபோல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார்.
கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா குறித்து நடிகை மீனு முனீர் கூறுகையில், ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. படத்தின் இடைவெளியில் நான் டாய்லெட் போயிருந்தேன். போய் விட்டு வெளியே வந்த என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்த நடிகர் ஜெயசூர்யா, முத்தமும் இட்டார். என்னுடைய அனுமதியின்றி இவ்வாறு அவர் செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல அம்மா சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து இடவேள பாபு தன்னிடம் உடல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் மீனு புகார் கூறியுள்ளார். இதேபோல நடிகர் முகேஷுடைய கோரிக்கைகளை தான் நிராகரித்ததால் தன்னை அம்மா சங்கத்தில் சேர விடாமல் தடுத்து வந்ததாக கூறியுள்ளார். முகேஷ் தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்டோரும் பல்வேறு புகார்களைக் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}