கொச்சி: கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் ஆடிப் போயுள்ளது.
மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஹேமா கமிட்டி கடுமையான புகார்களை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கமான அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. அத்தனை பேரும் ராஜினாமா செய்து விட்டனர்.
இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. நடிகைகள் சிலர் கூறிய புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
நடிகைகள் சோனியா மல்ஹார், மீனு முனீர், ரேவதி சம்பத் உள்ளிட்டோர் இதுவரை புகார் கூறியுள்ளனர். நடிகை சோனியா மல்ஹார், நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியுள்ளார். அதேபோல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார்.
கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா குறித்து நடிகை மீனு முனீர் கூறுகையில், ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. படத்தின் இடைவெளியில் நான் டாய்லெட் போயிருந்தேன். போய் விட்டு வெளியே வந்த என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்த நடிகர் ஜெயசூர்யா, முத்தமும் இட்டார். என்னுடைய அனுமதியின்றி இவ்வாறு அவர் செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல அம்மா சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து இடவேள பாபு தன்னிடம் உடல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் மீனு புகார் கூறியுள்ளார். இதேபோல நடிகர் முகேஷுடைய கோரிக்கைகளை தான் நிராகரித்ததால் தன்னை அம்மா சங்கத்தில் சேர விடாமல் தடுத்து வந்ததாக கூறியுள்ளார். முகேஷ் தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்டோரும் பல்வேறு புகார்களைக் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}