தராவா : 2025 புத்தாண்டை வரவேற்று, கொண்டாட உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில நாடுகளில் 2025 ம் ஆண்டு புத்தாண்டு பிறந்து விட்டது.. மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும். பல்வேறு வகைகளில் இதை வரவேற்று, கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். ஆனால் பூமியின் சுழற்சியின் காரணமாக உலகம் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் புத்தாண்டை கொண்டாடுவது கிடையாது. புத்தாண்டை மக்கள் கொண்டாடும் நேரம் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும். இன்னும் சொல்லப் போனால் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவுகள், நாடுகள் தான் புத்தாண்டு பிறப்பை முதலில் கொண்டாடுவார்கள்.

அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டு புத்தாண்டும் மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு எனப்படும் கிரிபாடி என்ற தீவில் தான் முதலில் பிறந்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான இந்த தீவில் தான் சர்வதேச நேரப்படி காலை 5 மணிக்கு 2025ம் ஆண்டு முதலில் பிறந்துள்ளது. இவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் காலை 5.15 மணிக்கு புத்தாண்டு பிறந்ததாக கொண்டாடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரங்களால் ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய பகுதிகளில் காலை 6 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.
பசிபிக் பிராந்தியத்தில் டோங்கா, சொமாவோ, ஃபிஜி ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரோலியாவின் சிட்னி, மெல்போர்ன், கேன்பரா ஆகிய பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு பிறந்ததை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் அடிலைடு, புரோகன் ஹில், க்யூன்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் இனி தான் புத்தாண்டு பிறக்க உள்ளது.
அது மட்டுமல்ல பூமியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜப்பான், தென் கொரியா, வட கொரியா ஆகியவற்றில் காலை 10 மணிக்கும், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் போன்ற நகரங்களுக்கு காலை 10.15 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்களாதேஷ், நேபால், இந்தியா, இலங்கை போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சர்வதேச நேரப்படி பகல் 01.30 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நகரங்களில் புத்தாண்டு பிறக்கும். 2025ம் ஆண்டு புத்தாண்டை கடைசியாக கொண்டாடும் நாடு தென்மேற்கில் உள்ள ஹவாய் தீவு தான். இங்கு மாலை 05.30 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}